முருக கடவுள் பற்றிய அபூர்வ ஒரு யோக ரகசியம்


*ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில்  வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள் நம் யோக கலாச்சாரத்தில்..*  தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பு உண்டு.

வயதாகும் நிலையை அதாவது *Aging Process -ஐ நிறுத்தி,* என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூத உடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

’சரம்’ என்றால் மூச்சு.
*’சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்’ கடவுள் நிலையையும் அடையலாம்* என்பது முருக பெருமானின் தத்துவம்.

*சரத்தை வணப்படுத்திக் காட்டியதால் ‘சரவணன்’* என்ற சிறப்புப் பெயரும் உண்டு. மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது;
சிவமாக வேண்டும். கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றிக் கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி.

அதை அவரே நிரூபித்துக் காட்டியதால், *‘பெம்மான் முருகன் பிறவான்; இறவான்...’* என்று அருணகிரி நாதரால் பாடப் பெற்றார்.அகத்தியர், போகர், ஔவையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார் உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெரு வாழ்வு எய்திய மகான்கள்.

உலகில் முருகனை அறியாத தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள் எந்த நாட்டிலுமே இல்லை.

முருகக் கடவுள் இல்லாத ஒரு நபரல்ல, மனிதனாக இருந்தவர் மகானாக மாறி இருக்கிறார்".

தமிழ் கடவுள் முருகன் என்கிறாய். ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை" என முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர் பற்றியும் அறிந்து கொள்ள மானுடராகிய நமக்கு இன்னும் ஞானமே போதாது.

இருப்பினும் அவருக்கு மனைவியர் இரண்டு பேர் எதற்கு என்பதை பற்றி  தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் சுழுமுனை என்றால் என்ன என்பதினை தெரிந்து கொள்ள வேண்டும்.

மகான் ஸ்ரீமத்சத்குரு சாந்தானந்த சுவாமிகள் தன் *கந்தகுரு கவசத்தில்* சொல்வதினை பாருங்கள்.

*"நடுனெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்.பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய்.சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்.சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா"* சுழுமுனை என்பது மானுட உடலில் உள்ள ஒரு மைய நரம்பு.

நமது உடலில் இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள் எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம், கண்கள், மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம், கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச் சொல்லலாம்.

இவை உடலின் இடது புறமாகவும் வலது புறமாகவும் ஒரு மையத்தினைச் சுற்றி பின்னிப் பிணைந்து உள்ளன. அந்த மையமே சுழு முனை என்பது ஆகும். இன்னும் விரிவாக சொல்லப் போனால் நமது உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக இல்லாமல் ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள் எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது உடலின் மத்தியிலேயே அமைகின்றன.

இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து பார்த்தால் மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்

*1.நெற்றி (பிரம்மந்திரா)*

*2.தொண்டைக் குழி (ஆங்ஞை)*

*3.மார்புக்குழி (விசுத்தி)*

*4.தொப்புள் குழி (மணிப்புரம்)*

*5.ஆண் /பெண் குறி (சுவாதீஸ்டன்)*

*6.மலக்குழி (மூலாதாரம்)*

இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால் இணைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை என்பதாகும்.

இந்த சுழுமுனை புருவ முடிச்சிலிருந்து தலையில் விரிந்து பின் குவிந்து ஒடுங்குகிறது. இந்த தலைப் பரப்பினை பெரியோர்கள் சாஹஸ்ரா எனவும் அர்ஸ் எனவும் அழைப்பர்.

*முருகன் கையிலுள்ள வேலும் இந்த சுழுமுனை குறியீடே.* வேலின் குவிந்த பரப்பு நமது நெற்றியையும் வேலின் கீழுள்ள தண்டானது மற்ற 6 குழிகளை இணைக்கும் சுழுமுனை கோடாகவும் உள்ளது.

மருத்துவர்களின் லோகோவில் இடது புறமாகவும் வலது புறமாகவும் சுழுமுனையைப் பின்னிப் பிணைந்து செல்பவை நமது அவயங்கள். வலது புறம் இருப்பது பிங்கலை இடது புறம் இருப்பது இடகலை.

இதைத்தான் கந்தகுரு கவசத்தில் ஸ்ரீமத்சத்குரு சாந்தானந்த சுவாமிகள் சொல்லுகிறார்.

*"இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்".*

எனவே இடது புறமும் வலது புறமும் உள்ள அவயங்களை இயக்கி இயங்கச் செய்வது இந்த சுழுமுனையே சுழுமுனை தத்துவத்தினை அறிந்து கொண்டால் எல்லாம் வல்ல இறைவனையும் அறிந்திடலாம்.

குண்டலினி சக்தி எனச் சொல்லப் படுவதும் இந்த சுழுமுனை முடிச்சான நெற்றிப் பரப்பேதான். ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இறைவன் உறைகிறான். காண்பன யாவற்றிலும் இறைவன் உள்ளான். இதையே கந்த குரு கவசத்தில் இப்படி சொல்லுகிறார் சதானந்த சுவாமிகள்.

*"உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவான் தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி எங்கும்  தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்".*

சுழுமுனையைப் பற்றி தெரிந்து கொண்டாயிற்று. இன்னும் தலைப்புக்கு வரவில்லையே என எண்ண வேண்டாம்.

ஒவ்வோரு உயிரிலும் உள்ள சுழுமுனையே முருகன். இடகலை பிங்கலை என இடப்புறமும்,வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி, தெய்வானை. ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே.

ஆனால், மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால் இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்.

இறுதியாக ஒன்று கடவுள் ஒருவரே. அவர் எவராலும் பெறப் படவும் இல்லை. அவர் எதையும் பெற்றுக் கொள்ளவும்  இல்லை. எனவே *தமிழ் கடவுள் முருகனுக்கு மனைவியர் இரண்டு என்பது இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர வேறொன்றும் இல்லை.*

*முருகன் என்பது மனிதன் இல்லை சத்தம் ஓசை சிவன் படைப்புக்களை சத்தமாகி முருகன் ஊடாகவே உருவாக்குகிறான். உருவாக்கி கொண்டு இருக்கிறான். அதனாலே ஓசையான சத்ததின் ஊடாக உருவாகும் தமிழ் மொழிக்கு கடவுள் முருகன் என்றார் .*

*எமது உடலில் இதயத்தில் சத்தம் கேட்டுக் கொண்டு இருக்கிறது.அது சத்தம். அந்த  ஓசை முருகன்.*

அந்த சத்தம் எமது இதயத்தில் இல்லை என்றால் உயிர் இறந்து விட்டது.உயிர் இருந்தால்தான் படைப்பு உருவாகும் . ஒரு மொழிக்கு ஓசை கொடுப்பதை என்றால் உலக அறிவான தகவல்களை ஆவணப்படுத்த வேண்டும்.

எனவே ஆவணப் படுத்தாத அறிவான தகவல் மனித ஆயுளுடன் முடிந்து போகும். எனவே என்னதான் ஓசை படைப்பாக இருந்தாலும் அதை ஆவணப்படுத்தாவிடில் வெறும் ஓசையாக அதன் அர்த்தம் கருத்து தெரியாத வெறும் ஓசையாகவே நாம் உணர்வோம்.

எனவே ஆவணப் படுத்தும் எழுத்து வடிவத்தை பிள்ளையார் என்று அழைத்தனர் அகத்தியர் போன்ற மகான்கள்.  சிவன் அணுத் துகள் atom , என்பதை உணர்ந்த அகத்தியர் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும் சிவனை சிவசக்தியான சிவலிங்கத்தை வழிப்பட சிவ பக்தர்கள். முதல் தமிழ் சங்க தமிழ் மொழி ஓசை ஊடக உருவாக்கபட்டமையால் *'ஓசை' யை முருகன்* என்றனர்.

நடராசர் கையில் உள்ள உடுக்கு ஓசையை குறிக்கிறது. *முருகனிடம் உள்ள வேல் மனித மூளைக்குள் இருக்கு செவ்வேல் குறிக்கும். அதாவது pinnal இதில் இருந்துதான் மெலட்னோன் என்ற சுரப்பு இரவு சுரந்து உடலை சம நிலை சீர் செய்கிறது. இதை மூன்றாம் கண் என்றும் சொல்வார்கள்.  இதனாலேதான் சிவனின் மூன்றாம் கண்ணில் இருந்து முருகன் தோன்றினார்கள் என்றும் சொல்கிறார்கள்.* சிவன் மனித உடலில் தலையில் உருவாக்கி இருப்பதுதான் செவ்வேல். இதை முருகனுக்கு சூரனை அழிக்க சக்தி கொடுத்தார் என்பதன் பொருள் அறியாமை எனும் இருளில் மனிதன் மிருகங்கள் போன்று வாழாமல் மனித மூளையில் உள்ள செவ்வேலை பயன் படுத்தி அறியாமை என்ற சூரனை வதம் செய்து அறிவுடன் வாழச் சொல்லும் வீர வரலாறு.

விந்து கட்டுதல் என்றொரு பயிற்சி நிலை யோகத்தின்கண் உள்ளதுதான் என்ற உண்மையும், அது சாதாரண அற்ப மக்களுக்கு சொல்லப்பட்டதல்ல என்றும் உணர்வதுடன் அதன் தன்மையையும் உணர்ந்திடலாம்.

ஞானம் பெறுதலின் ஒரு படி நிலையே விந்து கட்டுதலாகும் என்றும் அதுவே முடிவானது அல்ல என்றும் அதை மூன்றாம் படி நிலையாகிய யோக நிலைதனை ஆறுமுகனார் அருளினால் பெற்றிட்ட யோகிகளால்தான் செய்திட இயலும் என்றும் அறியலாம்.

பெண்பாலிலுள்ள சுரோணிதமும், ஆண்பாலிலுள்ள சுக்கிலமும் சேர்ந்து கருத்தரித்து உடம்பும் உயிரும் உண்டாகிறது.

தந்தையிடமிருந்து உயிரும் தாயிடமிருந்து உடம்பும் தோன்றினாலும் தோன்றிய அந்த உடம்பும் உயிரும், நூறு ஆண்டுகள் வரை நட்புடன் இருந்து உடம்பும் உயிரும் பிரியாமல் நட்போடு வாழ்ந்தாலும் ஒரு காலத்தில் எப்படியாவது உடம்பை விட்டு உயிர் பிரிந்து போய் விடுகிறது. இதுவே இயற்கையின் நியதியாகும்.

பரு தேகமான ஆணும், பெண்ணும் கூடினால், உயிரும் பிரிந்துப் போகக் கூடிய பரு உடம்பும் உண்டாகிறது. ஆனால் சூட்சும தேகத்தை உண்டாக்கவல்ல இடது கலையாகிய பெண்ணும், வலது கலையாகிய ஆணும் சேர்ந்தால் சூட்சும தேகம் உண்டாகும்.

ஆனால் இடது கலையும் வலது கலையும் ஒருபோதும் சாதாரணமாக ஒன்று சேராது. ஆனால் ஒன்று சேராத இடது கலையையும் வலது கலையாகிய சூரிய கலையையும் சுழிமுனையாகிய புருவ மத்தியில் ஒன்று சேர்த்தால் அழிகின்ற பரு உடம்பும் அழியாது,

அழியாத சூட்சும தேகமும் தோன்றும், உயிரும் தோன்றி எல்லாம் ஒன்றினுள் ஒன்றாய் கலந்து என்றும் அழிவற்ற மரணமிலாப் பெரு வாழ்வைப் பெற்று மாறாத இளமை கொண்ட ஒளிதேகமாக மாறி விடும்.

இந்த மாபெரும் இரகசியத்தை முதலில் அறிந்த முதுபெரும் தலைவனே நம் முருகப்பெருமான்தான்.

தான் பெற்ற அந்த பேரின்பத்தை தனது சீடனான அகத்திய பெருமானைச் சார்ந்து சேராத இடது வலது கலைகளை சுழிமுனையில் ஒடுக்கி சேர்ந்திடச் செய்து அகத்தியம் பெருமானையும் மரணமிலாப் பெருவாழ்வை பெறச் செய்தார் என்பதையும் நாம் உணர்ந்து அறியலாம்.

          

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...