ஓரெழுத்து மந்திரம் என்றால் என்ன?

*திருமூலர் பெருமான் சொன்ன ஓரெழுத்து மந்திரம் என்றால் என்ன....?*

*ஒரேழுத்து மந்திரம்.!*
**************************

ஒரே ஒரு எழுத்தால் ஆன மந்திரம்தான்.! மிக ஆச்சர்யமான இந்த ஓரெழுத்து மந்திரம் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?... பலர் என்னிடம் அந்த ரகசியத்தை கேட்டீர்கள்அதனாலேதான் இந்த பதிவு... இன்று நம் சித்தர்களின் குரலில்...

இந்த மந்திரத்தை *”பேசாத மந்திரம்”, ”ஊமை எழுத்து”, ”நெஞ்செழுத்து”, ”மௌன அட்சரம்” “நாயோட்டு மந்திரம்”* என பல பெயர்களில் சித்தர்கள் தங்கள் பாடல்களில் விளக்கியுள்ளனர்.

கொங்கணவர் இந்த மந்திரம் பற்றி இப்படி சொல்கிறார்..
*"ஓம் என்ற அட்சரம் தானுமுண்டு அதற்க்குள் ஊமை எழுத்தும் இருக்குதடி"*

திருமூலர் இதனை *“நாயோட்டு மந்திரம்”* என்கிறார்.

*"நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும் என்பரே"*
*நாயோட்டு மந்திரம் இந்நாய்க்கு மிக உகந்ததே*
*நாயோட்டு மந்திரம் நாயேன்யான் விட்டிலேன்*
*நாயோட்டு மந்திரம் இந் நாயை வீடு சேர்க்குமே!*
திருமூலர்.
சிவவாக்கியர்  இந்த மந்திரத்தினை இப்படி குறிப்பிடுகிறார்
*"அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து சொல்ல வல்லிரேல்"*

மற்றொரு பாடலில் சிவவாக்கியர் பின்வருமாறு விளக்குகிறார்.

*அகாரம் என்னும் அகரத்தில் அவ்வு வந்துதித்ததா?*
*உகாரம் என்னும் அகரத்தில் உவ்வு வந்துதித்ததா?*
*அகரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதா?*
*விகாரமற்ற யோகிகள் விரிந்துரைக்க வேணுமே?*

வள்ளலாரும் இந்த மந்திரத்தின் குறிப்பை இப்படிச் சொல்கிறார்.

*"ஒரேழுத் தில் ஐந்துண்டென்பார்* *வெண்ணிலாவே -அது ஊமை* *எழுத்தாவதென்ன வெண்ணிலாவே "*

அகத்தியரும் இந்த மந்திரத்தின் அருமைகளை பின் வருமாறு கூறுகிறார்.

*"எகமேனும் ஓரெழுத்தின் பயனைப் பார்த்தே*
*எடுத்துரைக்க இவ்வுலகில் எவருமில்லை*
*ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக் கொண்டே*
*அறிந்தொமேன்பர் மௌனத்தை அவனை நீயும்*
*வேகாச் சாகாத தலை கால் விரைந்து கேளாய்*
*விடுத்த அதனை உரைப்பவனே ஆசானாகும்*
*தேகமதில் ஒரெழுத்தை காண்பவன் ஞானி*
*திருநடனம் காண முத்தி சித்தியாமே!"*

*இத்தனை மகத்துவம் வாய்ந்த அந்த ஓரெழுத்து மந்திரம்தான் என்ன?*

பிரணவ மந்திரமான *”ஓம்”* காரத்தில் இந்த ஓரெழுத்து மந்திரம் ஊமை எழுத்தாக உள்ளது என்கிறார் கொங்கணவர்.

சிவவாக்கியரோ *"அஞ்செழுத்தில் ஒரேழுத்து "* என குறிப்பு தருகிறார். அதாவது ந ம சி வா ய என்கிற ஐந்தெழுத்தில் ஓர் எழுத்து என்கிறார்.

திருமூலரோ *”நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும்”* என்கிறார். அது சரி!, நாயை எப்படி விரட்டுகிறோம்.....!

*”ச்சீய்”....!*

ஆம்! , இத்தனை மறைவாக சித்தர்கள் குறிப்பிட்ட அந்த ஓரெழுத்து மந்திரம் *“சி”* என்பதாகும். இதனை *”சி”* காரம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

*ஓம் என்கிற ஓங்காரத்தில் இந்த ”சி” ஊமை எழுத்தாய் இருக்கிறது என கொங்கணவர் ஏன் சொன்னார்?*

இதற்கான விளக்கம் பின்வரும் சிவவாக்கியர் பாடலில் கிடைக்கிறது.

*அகாரம் என்னும் அகரத்தில் அவ்வு வந்துதித்ததா?*
*உகாரம் என்னும் அகரத்தில் உவ்வு வந்துதித்ததா?*
*அகரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதா?*
*விகாரமற்ற யோகிகள் விரிந்துரைக்க வேணுமே?*

*அகாரமாகிய ”அ”வ்வும், உகாரமாகிய *”உ”*வ்வும் சிகாரமாகிய ”சி”வ்வும் இல்லாமல் இனைய முடியாது*. இது எப்படி என்பதை யோகி ஒருவரே உபதேசிக்க வேண்டும் என்கிறார். இந்த ரகசியம் காலம் காலமாய் குருமுகமாவே வழங்கப் படுகிறது. இதனையே குரு உபதேசம் செய்கிறார்.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...