சிவ யாத்திரை

சிவ யாத்திரை
....
பிறந்து
தவழ்ந்து
நடந்து செல்லும்
மனிதில்தான்
எத்தனை கனவுகளோ ....

மனதின்
அத்தனை கனவுகளிலும்
அசைபோடும் நினைவுகள்
எத்தனை எத்தனையோ ....

மனதின்
அத்தனை கனவு நினைவு தாண்டி
அந்த அதே மனம்
அந்த மனதின்
மூலமான
உயிரின்
கனவுகளை என்று எட்டுமோ

எட்டினாலும்
மனதிற்க்கு கிட்டுமோ
ஒரு உயிரின்
அந்த உயிரின்
பூமி பயணித்திற்க்கு
காரணமான
உயிரின் கனவுகளை ...

மனம் கனவு கண்டு
அது நினவாகிபோகாமலே
அந்த மனம் சுமந்த
உயிரும் மாண்டே போனாலும் உடல் விட்டு
உருவாக மாறி நடந்த பூமி விட்டு .... .
உயிரும் சுமக்குமே
அறியா பிள்ளையான
அந்த
மனதின் கனவுகளை ...

உயிரின் கனவுகளை
இங்கு
உயிரே நிறைவேற்ற
இறை சட்டம் இல்லை .
உயிரின் கனவையும்
நிறைவேற்றும்
திவ்ய அஸ்திரம் மனமே ...

உயிருக்கு
வேறு வழியே இல்லை
அது
மனதை வைத்தே
பிறந்த உயிரின் கனவின்
மலை ஏறவும் வேண்டும்
என்பதே இறை சட்டம்

ஒரு உயிரின்
கனவுகளை
அந்த உயிரில்
உறவாடும் மனம் அறிந்தால்
அதற்க்கு பிறகு
உதயமாகும்
யாத்திரையே
சிவ யாத்திரை
...
ஓம்
நம ஓம் நமசிவாய



No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...