இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லி அலுத்துப் போய்விட்டது..!
மின்சாரம் என்றால் என்ன, ?
உயிர் என்றால் என்ன, ?
மறுபிறப்பு எப்படி ஏற்படுகிறது, ?
இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது, ?
- என்பதற்கு யாராவது
_"இதுதான்"_ - என்று முடிவாக நிரூபிக்க முடிந்தால், கடவுள் உண்டா, இல்லையா என்பதையும் நிரூபிக்க முடியும்..!
மேற்சொல்லியவற்றை சற்று ஆழ்ந்து பாருங்கள்..!
எல்லாமே இயக்கம்தான்..! (Process)
எதுவுமே ஒரு பொருளாகக்_
(Object) கிடையாது._
ஆகவே,
கடவுள் என்பதும் ஒரு இயக்கம் தான்..!
அது உயிரற்ற_ பொருள்களில்,
( Inanimate Objects )_உறக்கமாக இருக்கிறது._
உயிர்ப் பொருள்களில்,_
( Animate Objects )_
உயிராக - பிரக்ஞையாக_ -
உணர்வாக - சக்தியாக -
இருக்கிறது..!_
இயக்கம் என்று வரும் பொழுது,
மேடு, பள்ளம்;
இன்பம், துன்பம்;
பகல், இருட்டு;
ஆண் - பெண்
என்று மாறுபட்டு இயங்குகிறது.
அப்பொழுது தான் அது ஒரு இயக்கமாக இருக்க முடியும்.
ஆகவேதான்,
"உங்கள் உள்ளே உள்ள உயிர்த்தன்மையை வணங்குங்கள்"
என்று கூறுகிறேன்.
கடவுள் உங்களுக்குள்ளே - உங்களோடு, மிக நெருக்கமாக இருக்கிறார்.
அதை நீங்கள் வெளியே தேடுவது முட்டாள் தனமில்லையா....???
ஆகவே,
கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஆதாரம், ஒரு செயலோடு , அது சம்பந்தப்படும் பொழுது தான் தெரியும்..!
மின்சாரம் இருப்பதற்கு ஆதாரம், அது _செயல்வடிவம்_ பெறும் பொழுது தான் விளங்கும்.
eg -
டிவி, ரேடியோ, மோட்டார் ஓடுதல் .....
கடவுள் உங்களிடம் உணர்வாக (Consciousness) இருக்கிறார்.
ஹெய்சென்பெர்க் (Heisenbergh) என்ற ஒரு ஜெர்மன் விஞ்ஞானியின்,
நிலையாமைத் த்துவம்'_
( Unerfainity Principle )
பற்றி உங்களுக்குத் தெரியுமா...???
அவர் கூறுவது:
அணுவில் உள்ள மூலக்கூறுகள்,
"ஒரு சமயம்
பொருளாகவும்,_
மறுசமயம்,
அலையாகவும்_
இன்னொரு சமயம்,
பொருளாகவும்_
அலையாகவும்_
மறுசமயம்,
எதுவுமே இல்லாமலும்_
( Nothing ! ) இருக்கிறது"
என்று கூறுகிறார் .
இதுவே கடவுள் தத்துவத்திற்கும் பொருந்தும் !
_கடவுள் ஒரு நிலையற்ற தன்மையில் இருக்கிறார்..!_
அதனால் தான் மனிதன் மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்கிறான்
இதில் புத்தர் அந்த ஒன்றுமற்ற தன்மையை (The Great Nothing) வற்புறுத்துகிறார்..
மதங்கள் பொருள்களை வலியுறுத்துகின்றன..
இவர்கள்தான்,
நீங்கள் நம்பும் ஆத்திகர்கள்..!
யோகிகளும், ஞானிகளும் அலையை ( Waves ) வற்புறுத்துகிறார்கள்..
நாத்திகன்,
அலையையும் - பொருளையும் பார்த்துப் புரியாமல் தவிக்கிறான்..!
இதை ஆழ்ந்து புரிந்து கொண்ட ஒருவன் இப்படிப்பட்ட அபத்தமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டு, தன் வாழ்நாளை வீண்டிக்க மாட்டான்..!
மனிதன்,
இந்த உலகத்தில்
படைக்கப்பட்டதே,
ஒருவருக்கொருவர் அன்பும்,
கருணையும் - கொண்டு,
உதவி செய்துகொண்டு,
ஆனந்தமாகச்
சிரித்து வாழவே..!
வேறு எதற்காகவும் இல்லை..!
பிறகு அவன் தன்னைத்தானே அறிந்துகொண்டு, ஞானத்தை அடைய வேண்டும்..!
No comments:
Post a Comment