✳️ நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால்
இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.
⚪எத்தனை வெற்றிகள்,
⚪எத்தனை தோல்விகள்,
⚪எத்தனை மகிழ்ச்சிகள்,
⚪எத்தனை துக்கங்கள்...
எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.
✳️ வந்ததெல்லாம் நம்மை விட்டுப்
போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?
✳️ வந்து போவதெல்லாம்
நம்முடையதல்ல என்பதால் நாம்
வெறும் பார்வையாளர்களே அல்லவா?
⚪எத்தனை நண்பர்கள்,
⚪எத்தனை பகைவர்கள்,
⚪எத்தனை உறவுகள்
நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து
வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம்
விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?
✳️ வாழ்வில் வந்ததெல்லாம்
நம்மைக் கடந்து சென்று
கொண்டுதானே இருக்கின்றன.
✳️ ஒரு விதத்தில் என்றும் நாம்
தனியர்களே அல்லவா?
✳️ இயற்கையின் விதியே
இது என்று உளமார உணர்ந்து
தெளியும் போது கிடைக்கும் அமைதி
சாதாரணமானது அல்ல.
அந்த அமைதியை மனதில்
நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.
✳️ #வெற்றிகள்_கிடைக்கும்_போது..,
"இதுவும்கடந்துபோகும்" என்பதை
நினைவில் கொள்ளுங்கள்...
கர்வம் தலை தூக்காது.
✳️ #தோல்விகள்_தழுவும்_போது..,
"இதுவும்கடந்துபோகும்" என்பதை
நினைவில் கொள்ளுங்கள்...
சோர்ந்துவிட மாட்டீர்கள்.
✳️ நல்ல மனிதர்களும், நண்பர்களும்
உங்கள் வாழ்க்கையில் வரும்போது..,
"இதுவும்கடந்துபோகும்" என்பதை
நினைவில் கொள்ளுங்கள்.
✳️ இருக்கும்போது அவர்களை
கௌரவிப்பீர்கள்.
அவர்கள் விலகும் போது பெரிதாக
பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.
✳️ தீய மனிதர்களும்,
பகைவர்களும்
உங்கள் வாழ்வில் வரும் போது..,
"இதுவும்கடந்துபோகும்" என்பதை
நினைவில் கொள்ளுங்கள்.
தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள்.
பெரிதாக மனஅமைதியை
இழக்க மாட்டீர்கள்.
✳️ #நெற்றி_சுருங்கும்_போதெல்லாம்..,
"இதுவும்கடந்துபோகும்" என்பதை
நினைவில் கொள்ளுங்கள்.
சுருக்கம் போய் முகத்தில் புன்னகை
தவழக் காண்பீர்கள்.
✳️ வாழ்க்கையின் ஜீவநாதமாக
இந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில்
பதிந்து போய் விட்டால்...
அந்தப் #புன்னகை நிரந்தரமாக
உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்!.
No comments:
Post a Comment