தினமும் வீட்டில் ஆரத்தி எடுக்கையில் நாம் கூற வேண்டிய ஆரத்தி மந்திரம்


நாம் தினமும் இறைவனை வழிபட்ட பின்பே பல வேலைகளை தொடங்குகிறோம். அப்படி வழிபடுகையில் இறைவனுக்கு வீட்டில் கற்பூர ஆரத்தி எடுப்பதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம்.

அப்படி ஆரத்தி எடுக்கையில் நாம் இறைவனுக்கான ஆரத்தி மந்திரம் அதை ஜபிப்பது நமது வேண்டுதலுக்கு மேலும் பலம் சேர்க்கும்.

அந்த வகையில் தினமும் ஆரத்தி எடுக்கையில் நாம் கூற வேண்டிய ஆரத்தி மந்திரம்.

*பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரம்:*

ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினே
நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹே
ஸமேகமான் காம காமாய மஹ்யம் !
காமேஸ்வரோ வைஸ்ரவனோத தாது !
குபேராய வைஸ்ரவனாய மகாராஜய நம:

*பொது பொருள்:*

அரசனுக்கெல்லாம் அரசனான இறைவனே, அனைத்திலும் வெற்றியை தரும் சக்தி கொண்டவனே, பக்தர்கள் கேட்பதை கொடுக்கும் வல்லமை உடையவரே, குபேர மகாராஜனே உங்களை போற்றுகிறேன்.

மேலே உள்ள பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரத்தை நாம் கூறுவதன் பயனாக நமது வேண்டுதகள் அனைத்தும் நிறைவேறும் நாம் குபேர சம்பத்துகளுடம் நமது வீட்டில் பல காலம் வாழ இறைவன் அருள்புரிவார். இந்த ஆரத்தி மந்திரத்தை முடிந்தவரை தினமும் ஜபிப்பது நல்லது.

தெய்வங்களுக்கு பூக்களால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் நற்பலன்கள்


1. அல்லிப்பூ - செல்வம்  பெருகும்
      
2. பூவரசம்பூ - உடல் நலம் பெருகும்
3. வாடமல்லி - மரணபயம் நீங்கும்
4. மல்லிகை - குடும்ப அமைதி
5. செம்பருத்தி - ஆன்ம பலம்
6. காசாம்பூ - நன்மைகள்
7. அரளிப்பூ - கடன்கள் நீங்கும்
8. அலரிப்பூ - இன்பமான வாழ்க்கை
9. செம்பருத்தி - ஆன்ம பலம்
10. ஆவாரம் பூ - நினைவாற்றல்  பெருகும்
11. கொடிரோஜா - குடும்ப ஒற்றுமை
12. ரோஜா பூ - நினைத்தது  நடக்கும்
13. மருக்கொழுந்து -  குலதெய்வம் அருள்
14. சம்பங்கி - இடமாற்றம்  கிடைக்கும்
15. செம்பருத்தி பூ - நோயற்ற வாழ்வு
16. நந்தியாவட்டை - குழந்தை குறை நீங்கும்
17. சங்குப்பூ (வெள்ளை) - சிவப்பூஜைக்கு  சிறந்தது
18. சங்குப்பூ (நீலம்) - விஷ்ணு பூஜைக்கு  சிறந்தது
19. மனோரஞ்சிதம் - குடும்ப  ஒற்றுமை, தேவ ஆகர்¬ணம்
20. தாமரைப்பூ - செல்வம் பெருகும், அறிவு வளர்ச்சி பெறும் 
21. நாகலிங்கப்பூ - லட்சுமி கடாட்சம், ஆரோக்யம்
22. முல்லை பூ - தொழில் வளர்ச்சி,  புதிய தொழில்கள் உண்டாகும்
23. பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ) - முன்னேற்றம் பெருகும்
24. தங்க அரளி (மஞ்சள் பூ) -  குருவின் அருள், பெண்களுக்கு  மாங்கல்ய பலம் கடன்கள் நீங்கும், கிரக பீடை நீங்கும்
25. பவள மல்லி - இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர்களினதும், ரிஷிகளினதும் அருளும், ஆசியும் கிடைக்கும்.
பழைய புஷ்பங்கள், மலராத மொட்டுக்கள்,  தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனிற்கு அர்ச்சனை செய்யக்கூடாது.
அரச்சனை செய்த பூக்கள்  கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகள் காலில் மிதிபடாதவாறு போட வேண்டும். முடிந்தால் தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி போட்டு மூடிவிடலாம்.
கோவிலில்  சாமிக்கு போட்ட மாலைகளை வாகனங்களில்  முன்பக்கம் கட்டுவது மிகபெரிய சாபம். இதனால்  தீமைகள்  உண்டாகும்  நன்மைகள் கிடைக்காது.
*பூசைக்கு சிறப்பான பூக்கள்*
1. திருமாலுக்கு --  பவளமல்லி, மரிக்கொழுந்து துளசி.
2. சிவன்  --  வில்வம், செவ்வரளி
3. முருகன் -- முல்லை, செவ்வந்தி, ரோஜா
4. அம்பாளுக்கு -- வெள்ளை நிறப்பூக்கள்..
ஆகியவை பூசைக்கு சிறப்பானவை.

*ஆகாதபூக்கள்*
1. விநாயகருக்கு -- துளசி   
2. சிவனுக்கு -- தாழம்பூ 
3. அம்பாளுக்கு  -- அருகம்புல்
4. பெருமாளிற்கு -- அருகம்புல்
5. பைரவர்   -- நந்தியாவட்டை
6. சூரியனுக்கு   -- வில்வம் 
ஆகியவை பூஜைக்கு ஆகாதவை...!!!

கோகர்ணம்

💫 ராவணனின் தாயார் ககேசி ஒரு சிறந்த சிவபக்தை தினசரி சிவபெருமானுக்கு பூஜை செய்பவள்.

💫 தன் தாயார் சிவபூஜை செய்வதற்காகவும் அதே சமயம் தன்னுடைய சக்தி மேலும் பெருகவும்  ராவணன் கைலாயத்தில் இருந்து ஒரு சிவலிங்கத்தை கொண்டு வர முடிவு செய்தான்.

💫 சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவருடைய கடும் தவத்திற்கு மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவனுக்கு ஜோதி லிங்கத்தை பரிசாக அளித்தார்.

💫 ஆனால் அதை எங்கும் கீழே வைக்காமல் இலங்கைக்கு எடுத்துச் சென்று பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார் சிவபெருமான்.

💫 ராவணனும் ஜோதி லிங்கத்தை எடுத்துக்கொண்டு ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தான். யோகி லிங்கத்தை இலங்கைக்கு எடுத்துச் சென்றுவிட வேண்டும் என்று ஒரே குறிக்கோளுடன் உண்ணவோ களைப்பாறவோ யோசிக்காமல் பறந்து கொண்டிருந்தான்.

💫 ராவணன் ஜோதி லிங்கத்தை இழுத்துச் செல்வதைக் கண்ட தேவரிஷிகளும், முனிவர்களும் அஞ்சினர்.

💫 அதி அற்புதமான ஜோதிலிங்கம் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டால் இராவணனின் சக்தி மேலும் அதிகமாகும். அதன் விளைவு உலகிற்கே பெரும் அழிவைத் தரும் என்று கருதினார்கள்.

💫 தேவ ரிஷிகளும் முனிவர்களும் ஒன்றாக சேர்ந்து பிரம்மாவிடம் அதை தடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

💫 ஆனால் பிரம்மதேவனும் நீங்கள் அனைவரும் சென்று ஆனைமுகத்தனை ஆவன செய்ய கேட்டுக்கொண்டார்.

💫 அவர்கள் அனைவரும் முதன் முழு கடவுள் கணபதியிடம் சென்று முறையிட்டனர்.

💫 தேவ ரிஷிகளின் வேண்டுதலை ஏற்று விநாயக பெருமான் கண் அசைத்தார்.

💫 வானில் பறந்து கொண்டிருந்த ராவணனுக்கு தாகம் ஏற்பட ஆரம்பித்தது.

💫 சரி நீர் மட்டும் பருகி கொள்ளலாம் என்று அவ்வப்போது ஒரு கையால் ஜோதி லிங்கத்தை பிடித்தபடி மறுகையால் ஆங்காங்கே ஓடும் நதியில் இருந்து நீர் பருகினான்.

💫  நீர் பருகிய உடன் வயிறு நிரம்ப ஆரம்பித்தது சிறுநீர் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது.

💫 ஆனால் ஜோதி லிங்கத்தை எங்கும் கீழே வைக்கக்கூடாது. மேலும் சிறுநீர் கழித்த பின் உடல் சுத்தி வர வேண்டும் என்ன செய்வது என்று யோசித்தபோது...

💫 ராவணன் எதிரே விநாயகப்பெருமான் ஒரு சிறுவனாக வடிவம் எடுத்து வந்து கொண்டு இருந்தார்.

💫 அந்த சிறுவனை அழைத்த ராவணன் இந்த ஜோதி லிங்கத்தை சிறிது நேரம் கையில் பிடித்து கொண்டு இரு.நான் என் கடன்களை முடித்து கொண்டு வருகிறேன் என்று கேட்க.

💫 அந்த சிறுவனோ , நான் வைத்துக் கொள்கிறேன். ஆனால் எனக்கோ அவசரமாக என் இருப்பிடம் செல்ல வேண்டும்.

💫 நான் மூன்று எண்ணுவேன் அதற்குள் வந்து விடுங்கள். என்று சொல்லி ஜோதி லிங்கத்தை கையில் பிடித்து கொண்டான்.

💫 ராவணன் அருகில் இருந்த நதிக்கரைக்கு ஓடிச்சென்று தன் வேலையை முடித்துக்கொண்டு இருந்தான்.

💫 சிறுவனான விநாயகர் ஒன்று, இரண்டு, மூன்று, என்று ராவணனை பார்த்தபடி எண்ணினான்.

💫 என் வேலை முடிந்து விட்டது இனி என்னால் காத்திருக்க முடியாது என்று கூறி அந்த இடத்திலேயே ஜோதி லிங்கத்தை கீழே வைத்து விட்டான்.

💫 அதைக்கொண்டு பதறிப் போன ராவணன் ஓடோடி வந்து  ஜோதி லிங்கத்தை தரையில் இருந்து எடுக்க முயன்றான் முடியவில்லை.

💫 கோபம் கொண்ட ராவணன் அந்த சிறுவனின் தலையில் ஒரு குட்டு வைத்தான்.

💫 அந்த சிறுவன் விநாயகப் பெருமானாக காட்சி தந்து ராவணனுக்கு புன்னகையுடன் தரிசனம் தந்து விட்டு சென்றார்.

💫 ராவணனும் தான் ஏமாற்றப்பட்டது சிவ மைந்தனால் என்ற பெருமையுடன் இலங்கை நோக்கி திரும்பினான்.

💫 இத்தகைய சம்பவம் நடந்த இடம் தான் கோகர்ணம் என்று அழைக்கப்படுகிறது. அங்குள்ள விநாயகர் சிலையின் தலையில் ஒரு சிறிய பள்ளம் இருப்பதை இப்போதும் காணலாம்.

பூஜையில் மணி அடிப்பது ஏன்

• பூஜையில் மெதுவாக மணி அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப்படுகிறது என்று அர்த்தம்.

•  கணகணவென்று மணி அடித்தால் தீபம் , ஆரத்தி  காட்டப்படுகிறது என்று அர்த்தம்.

• இரண்டு பக்கமும் விசேஷமாக மணி அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது என்று அர்த்தம்.

• மெதுவாக மணி அடித்துக் கொண்டிருந்தால் பகவான் அமுது உண்கிறார் என்று அர்த்தம்.

மணியின் ஓசையை வைத்தே கோவிலில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம்.

மணி அடிப்பதை மஹான்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். மணியை வலது கையில் எடுத்து, இடது கையில் மாற்றிக்கொண்டு கற்பூர ஆரத்தித் தட்டை எடுத்து ஆரத்தி காட்ட வேண்டும். பிறகு இடது கையிலிருந்து மணியை வலது கைக்கு மாற்றிக் கொண்டு கீழே வைக்க வேண்டும்.

இடது கையால் மணியை எடுக்கவே கூடாது. மணி என்பது சாதாரண விஷயம் அல்ல. அதில் பிரணவம் த்வனிக்கிறது. தேவதைகளை வரவழைக்கிறது. துஷ்ட ப்ரக்ருதிகளை ஓட்டுகிறது. பகவானுக்கு அமுது காணும்போது நிசப்தமாக இருக்க வேண்டும். அமங்கலமான பேச்சுகள் காதில் விழக்கூடாது. மணி அடித்தால் அவை காதில் விழாது.

மனம் ஒரு குரங்கு..


 
ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம்.

எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ''சரி அவ்வாறே செய்து விடுவோம். அதற்கு முன்னால் உண்ணா விரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்து விடுங்கள். ஏனெனில் விரதம் முடியும் பொழுது பசியாக இருக்கும். எனவே அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது'' என்று அறிவுரை சொன்னார்.

அதை அமோதித்த மற்ற குரங்குகளும் அருகில் இருந்த தோட்டத்திலிருந்து நிறைய வாழைப்பழங்களைக் கொண்டு வந்து தலைவர் முன் வைத்தன. உடனே தலைவர் ''சரி உண்ணா விரதத்தை ஆரம்பித்து விடுவோம்'' என்றார். அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூத்த அனுபவமுள்ள குரங்கு ''தலைவரே விரதம் துவங்குவதற்கு முன் அவரவர் பழங்களை பிரித்து கொடுத்து விடுவோம். இல்லையென்றால் விரதம் முடிந்தவுடன் சண்டையிட்டுக் கொள்வார்கள்'' என்று யோசனை சொல்லிற்று.

அதை ஆமோதித்த தலைவரும் அவ்வாறே பழங்களை பகிர்ந்தளித்தார். அப்பொழுது ஒரு குரங்கு எழுந்து, பழத்தின் தோலை உரித்து வைத்து விடுவோம். அந்த நேரத்தில் உரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றவுடன். பழத்தின் தோல் உரித்து முன்னே வைக்கப்பட்டது.

உடனே ஒரு குட்டிக் குரங்கு எழுந்து தலைவரே ஒரு நாள் விரதம் இருக்கப் போகிறோம். தோல் நீக்கிய இந்தப் பழங்களின் மேல் தூசிகள் படிந்து விடும். எனவே இந்த பழங்களெல்லாம் கனிந்து அழுகிப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. நமக்குதான் உணவை வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்ளும் வசதி இருக்கிறதே ? எனவே பழங்களை அவரவர் வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்வோம் என்றது. அவ்வளவுதான் பழங்கள் அனைத்தும் வாயில் ஒதுக்கி வைக்கப்பட்டன.

சற்று நேரம்தான் ஆகியிருந்தது. ஒதுங்கியிருந்த பழங்களெல்லாம் தானாகவே தொண்டைக் குழியை நோக்கி போகத் துவங்கின. இவ்வாறு குரங்குகளின் விரதம் நிறைவுக்கு வந்தது.

இவ்வுலகில் பெரும்பாலானவர்களின் தியான மற்றும் விரத முயற்சியும் இவ்வாறுதான் இருக்கிறது.

உலக ஆசையை விட்டு விட வேண்டும் என்று எண்ணினாலோ, முயற்சித்தாலோ, அது நடக்கவே நடக்காது

ஏனெனில் அது எதிர்மறை சிந்தனையாகவும், முயற்சியாகவும் அமைந்து விடுகிறது.

மாறாக, பரம்பொருள் அல்லது ஆன்ம  நாட்டத்தை அதிகப்படுத்திக் கொள்ளும் அளவு உலக ஆசைகள் ஒவ்வொன்றாக விட்டு ஓடி விடுவதை உணரலாம்.

அதனால் தான் அன்றே சொன்னார்கள்
மனம் ஒரு குரங்கு என்று மிகச் சரியாக.

வாசி என்னும் வாசுகி பாம்பு


அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது என்கிறார் பெண் சித்தர் அவ்வை. அரிதாய் தோன்றிய மனித உடல் அழியக் காரணம் என்ன எனச்சிந்தித்தால் . உயிர் போய்விட்டது என்கிறோம்.   அந்த உயிர் இத்தனை நாள் எங்கிருந்தது என்ற கேள்வி வருகிறது.  உயிர் எங்கே இருக்கிறது என நவீன விஞ்ஞானம் இதுவரை அறுதியிட்டுக் கூறவில்லை.
தாயின் கர்ப்பத்தில் குழந்தை இருக்கும் போது அதன் தொப்புழ்க் கொடியில் உயிர் அந்தரந்தமாக இருக்கிறது என்கிறது இந்தப் பாடல். எனவேதான் பிறக்கும் குழந்தை தொப்புழ்க் கொடியுடன் சேர்ந்தே பிறக்கிறது                                     
ஒரு குழந்தை பிறந்து ஒருமணிநேரம் வரைக்கும் தொப்புள் கொடியை அறுக்காமல் அப்படியே விட்டுவிட்டால் கொடியினுள் இருக்கும் Stem Cells திரவம் மெல்ல மெல்ல குழந்தையின் வயிற்றுக்குள் முழுவதுமாக இறங்கிவிடும் இது அக்குழந்தையின் வாழ்நாள் முழுவதுக்குமான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. மேலும் அக்குழந்தைக்கு CANCER என்ற நோயே வராது.
                                                                   குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்து, இந்த மண்ணைத் தொட்டதும் அது அழுதே ஆக வேண்டும். இல்லையேல் மற்றவர் அழத் தொடங்குவர்.

                      அழுகையே பிறக்கும் ஒவ்வருவரும் செய்யும் முதல் காரியம். குழந்தை அழும்போது முதல் முதலாக காற்று உடலின் உள்ளே புகுகிறது. போகும் போது  உயிரும் சுவாசத்துடன் கலந்து வெளியே  செல்கிறது.

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே .
– அகத்தியர் ஞானம் 23

மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை”
மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம்.
இவ்வாறு  வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர்.

 மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள்.

வயது முதிர்ந்த கிழவரும் மனத்தின் சக்தியைப் பயன்படுத்தி, வாயுவை நெறிப்படுத்த முடிந்தால், அவரே குமாரனாவர். மேனியும் சிவந்திடும் என ஆணை இடுகிறார் சிவவாக்கியர். இவ்வாறு
மூச்சிலே இருக்குது சூட்சமம்!

ஈராறு கால் கொண்டெழுந்த புரவியைப்
போராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீராயிரமும் நிலமாயிரத்தாண்டும்
போராது காயம் பிரான் நந்தி ஆணையே!

பதினாறு மாத்திரை ஓடி வீணாகக் கழிந்துகொண்டிருக்கும் மூச்சை முறையாக விதிப்படி அடக்கியாளும் ஆற்றல் பெற்ற யோகியர், ஆயிரம் ஆண்டுகள் நீரில் முழுகி இருந்தாலும், மண்ணில் ஆயிரம் ஆண்டுகள் புதையுண்டுக் கிடந்தாலும் உடல் அழியாது என்கிறார்.

ஆக மூச்சை நெறிப்படுத்தினால் உடம்பிற்கு அழிவில்லை என்கிறார்கள். ஆனால் அதை ஏன் முறையாக ஆராய்ந்து மூச்சை நெறிப்படுத்தும் முறைகளை மக்களுக்கு அறியப்படுத்தவில்லை? தவறு என்றால் இந்தக் கூற்று தவறு என நிருபிக்கட்டுமே! பிறகு இதை ஏன் நாம் பேசிக்கொன்டிருக்கப்போகிறோம் ?

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குறியதுவாமே

இரு நாசிகள் வழியே ஏறியும் இறங்கியும் இயங்கும் காற்றினைக் கணக்காக ஆளும் திறமை கொண்டோர், எமனை அருகில் வராமல் விலக்கி வைக்கலாம் என்கிறார்கள், நம் சித்தர்கள். இதை ஏன் நாம் முக்கியமாக எடுத்து ஆராயவில்லை?

இடது மூக்கு வழியாக 16 மாத்திரை உள்ளே இழுப்பது பூரகமாகும். 64 மாத்திரை அளவு உள்ளே அடக்குதல் கும்பகமாகும். பின்னர் வலது மூக்கின் வழியாக 32 மாத்திரை வெளியிடுதல் ரேசகமாகும்.   (1 நிமிடத்திற்கு
6 முறை சுவாசிக்க வேண்டுமாம்..60 நிமிட நேரத்திற்கு 6  விதம்  360 முறை.. 1நாளைக்கு 24 மணி நேரத்திற்கு 360 விதம் 8,640 முறை சுவாசிக்வேண்டும்)

இதுவே காற்றைப் பிடிக்கும் கணக்கு. ஆனால் இதை முறைப்படுத்தல், அத்தனை சுலபமல்ல. தக்க ஒரு குருவின் வழிகாட்டல் இல்லாமல் இதுவும் கைக்கூடாது. எனவே இதைத் தானே செய்ய முயலவேண்டாம் .

வெற்றிக்கு வழிவகுக்கும் சுவாசம் விதியை  மாற்றும் அறிவை அடைந்தவர்கள் சித்தர்கள்  நாளும் நடைபெறும் நடப்புகளை தங்கள் சுவாசம் மூலமாகவே தங்கள் விருப்பப்படி நிறைவேற்றிக்கொள்ள எளிய முறைகளைக் கண்டு கூறியிருக்கிறார்கள் நம் சித்தர்கள். இதற்குச் ‘சரம் பார்த்தல்’ என்று பெயர்.

‘ஞானசர நூல்’ எனச் சரம் பார்த்தல் பற்றியும் நமது வாழ்வில் நாம் விரும்பும் வெற்றியை விரும்பிய விதமே பெறும் ஆற்றலைப்  பெறும் வழிகளையும் நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

கேட்கில் இடம்: தூது ஆடை, அணி பொன்பூணல்
கிளர்மனம், அடிமைகொளல், கீழ்நீர் கிண்டல்
வாழ்க்கை மனை எடுத்தல், குடிபுகுதல், விற்றல்
மன்னவரைக் காணல், உண்மை வறுவல், சாந்தி
வேட்கை, தெய்வப் பதிட்டை, சுரம் வெறுப்புத் தீர்த்தல், விந்தைப் பெறுதல், தனம் புதைத்தல் மிகவும் ஈதல், நாடகமல மலர் முகத்தாய் நரகம் தீர்த்தல் நன்றேயாம் இவ்வை எல்லாம் நயந்து பாரே!

சந்திர கலை அதாவது இடது நாசியில் மூச்சு ஓடும் போது செய்யத்தக்க காரியங்களின் பட்டியல் இது. செய்தால் இவற்றில் வெற்றி நிச்சயம் என ஞான சர நூல் 8 கூறுகிறது.

பார்க்கில் வலம்: உபதேசம், வித்தை, சேனை,
படையோட்டல், பயிர்செட்டுக் களவு, சூது,
பேர்க்கவொணா வழக்குக் கரிபரி, தேரூர்தல்
பிறங்கும் எழுந்திடுதல், சங்கீதம், பாடல்
வார்த்தை, பகைப் பக்கம் கோள், பசாசு தீர்த்தல்,
மந்திரஞ் சாதித்தல், மருந்துண்ணல், உறங்கல்,
கோத்த புன்னாடல், கொல்விடங்கள் தீர்த்தல்
கொடும்பிணி, தம்மென்பன யோகங் குறிக்கும் தானே
– ஞான சர நூல்   9

இவை சூரிய கலை எனப்படும் வலது நாசியில் சுவாசம் ஓடும் போது செய்யத்தக்கவையாகும். இந்தச் சர ஞானமும் சரிவர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, முறைபடுத்தப்படுமானால் தமிழர் சமுதாயம் உலகின் வளமான சமுதாயமாக ஆகிவிடும். ....!

“இருவினை தீர்க்கும்
எமனையும் வெல்லும்
திருவடியைப் பாட வந்தோம்”

என்று வீரமணிதாசனின் ஐயப்பன் பாடல் குறிப்பதும் இதைத்தான்.

இராகு, கேது குறிப்பதுவும் இதைத்தான்.

நமது உடலில் நிறைய எண்ணற்ற இருவினைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
மாந்த உடலில் நிகழும் 180 டிகிரிக்கு நேர்எதிரான எந்தவொரு இயக்கமும் இராகு, கேது எனலாம். சோதிடத்தில் இராகு உச்சமானால் கேது நீச்சமாகும். கேது உச்சமானால் இராகு நீச்சமாகும். இது விதி. அதே போல உலகில் பகல் உச்சமானால் இருள் நீச்சமாகும். இருள் உச்சமானால் பகல் நீச்சமாகும். அவ்வளவுதான் சமாச்சாரம்.                     நாசி உள்வாங்கும்(ராகு) ,வெளித்தள்ளும்(கேது) இரண்டு வேலையையும் செய்கிறது. நாசியில் ஒடும் சுவாசம்தான் வாசி என்னும் வாசுகி பாம்பு. புருவ மத்தி மேரு மலை. ராகு அசுரர், கேது தேவர். அமிர்தம் எப்படி வருகிறது என புரிந்துகொள்ளவும்...!

               

ஹனுமன் சாலிசா..!


 


அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும். தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உடனே வந்து சேரும் என்கிறார் துளசிதாசர். அனுமன் சாலீசா என்ற பெயரில் அவர் எழுதிய வடமொழி ஸ்லோகத்தின் தமிழாக்கம் இது! ராமநாமம் சொல்லி வென்ற மாருதியின் திருநாமம் சொல்லி வெல்லுங்கள்.

1. ஜெய ஹனுமானே! ஞானகுணக் கடலே!
மூவுலகை யெழுப்பும் வானரர் கோனே!

2. ராமதூதனே! ஆற்றலின் நிறையே!
அஞ்சனை மைந்தனே! வாயுவின் புதல்வனே!

3. மாபெரும் வீரனே! பெருந்திறல் வடிவே!
தீமதி நீக்கிடும் நன்மதி நண்பனே!

4. பொன் மேனியனே! பட்டாடை புனைவோனே!
ஒளிர்குண்டலமுடன் அலைமுடி கொண்டோனே!

5. இடி, கொடிமிளிரும் கரங்கள் கொண்டோனே!
மூஞ்சைப் பூணூல் தோளணிவோனே!

6. சிவனின் அம்சமே ! கேசரி மகனே!
உனதொளி வீரத்தை வணங்குது உலகே!

7. பேரறி வாளியே! நற்குண வாரியே!
ராமசேவைக்கென மகிழ்வுடன் பணிவோனே!

8. தலைவன் பெருமையைக் கேட்பதுன் பரவசம்!
ராமயிலக்குவ சீதையுன் மனவசம்!

9. நுண்ணிய உருவாய் அன்னைமுன் தோன்றினாய்!
கோர வுருவினில் இலங்கையை எரித்தாய்!

10. அசுரரை அழித்திடப் பேருருக் கொண்டே
ராம காரியத்தை நலமுடன் முடித்தாய்

11. சஞ்சீவி கொணர்ந்தே இலக்குவனை எழுப்பிட
விஞ்சிய அன்புடன் ராமனுனைத் தழுவினார்!

12. ரகுபதி யுன்னைப் பெரிதும் புகழ்ந்தே
பரதனைப் போல்நீ உடனுறை என்றார்!

13. ஆயிரம் நாவுடை ஆதி சேஷனுன்
பெருமையைப் புகழ்வதாய் அணைத்தே சொன்னார்!

14. சனகாதி முனிவரும் பிரம்மாதி தேவரும்
ஈசனும் நாரதர் கலைமகள் சேஷனும்

15. காலன் குபேரன் திசைக் காவலரும்
கவிஞர் புலவரால் சொல்லிட இயலுமோ?

16. சுக்ரீவனுக்கு அரசை அளித்திட
ராமனின் நட்பால் உதவிகள் செய்தாய்!

17. உன் அறிவுரையை வீடணன் கொண்டதால்
அரியணை அடைந்ததை இவ்வுலகு அறியும்!

18. தொலைவினில் ஒளிரும் ஞாயிறைக் கண்டே
சுவைதரும் கனியெனப் பிடித்து விழுங்கினாய்!

19. வாயினில் ராமனின் மோதிரம் கவ்வியே
ஆழியைக் கடந்ததில் வியப்பெதும் உண்டோ!

20. உலகினில் முடியாக் காரியம் யாவையும்
நினதருளாலே முடிந்திடும் எளிதாய்!

21. ராமராச்சியத்தின் வாயிற் காவலன்நீ!
நுழைந்திட வியலுமோ நின்னருள் இன்றி!

22. உனைச் சரணடைந்தால் இன்பங்கள் நிச்சயம்!
காவலாய் நீவர ஏதிங்கு எமக்கு அச்சம்!

23. நின்னால் மட்டுமே நின்திறல் அடங்கும்!
மூவுலகும் அதன் முன்னே நடுங்கும்!

24. பூதப் பிசாசுகள் நெருங்கிட வருமோ!
மஹாவீர னுன் திருநாமம் சொல்வாரை!

25. நோய்களும் அகலும் துன்பங்கள் விலகும்!
பலமிகு நின்திரு நாமம் சொல்லிட!

26. தொல்லைகள் தொலைந்திட அனுமன் அருள்வான்!
மனம், வாக்கு, செயலால் தியானிப் பவர்க்கே!

27. தவம்புரி பக்தர்க்கு வரங்கள் நல்கிடும்
ராமனின் பணிகளை நீயே செய்தாய்!

28. வேண்டிடும் பக்தர்கள் ஆசைகள் நிறைவுறும்!
அழியாக் கனியாம் அனுபூதி பெறுவார்!

29. நான்கு யுகங்களும் நின்புகழ் பாடிடும்!
நின்திரு நாமமே உலகினில் சிறந்திடும்!

30. ஞானியர் நல்லோரைக் காப்பவன் நீயே!
தீயவை அழிப்பாய்! ராமனின் கனியே!

31. எட்டு ஸித்திகளும் ஒன்பது செல்வங்களும்
கேட்டவர்க்கு அருள்வரம் சீதையுனக் களித்தார்!

32. ராம பக்தியின் சாரமே நின்னிடம்!
என்றும் அவனது சேவகன் நீயே!

33. நின்னைப் பற்றியே ராமனை அடைவார்!
தொடர்வரும் பிறவித் துன்பம் துடைப்பார்!

34. வாழ்வின் முடிவினில் ராமனடி சேர்வார்!
ஹரியின் பக்தராய்ப் பெருமைகள் பெறுவார்!

35. மறுதெய்வம் மனதில் நினையா பக்தரும்
அனுமனைத் துதித்தே அனைத்தின்பம் பெறுவார்!

36. துன்பங்கள் தொலையும் துயரங்கள் தீர்ந்திடும்!
வல்லிய அனுமனை தியானிப் பவர்க்கே!

37. ஆஞ்ச நேயனே! வெற்றி! வெற்றி! வெற்றி!
விஞ்சிடும் குருவே! எமக்கருள் புரிவாய்!

38. நூறுமுறை இதைத் துதிப்பவர் எவரோ
அவர் தளை நீங்கியே ஆனந்தம் அடைவார்!

39. அனுமனின் நாற்பதைப் படிப்பவர் எல்லாம்
சிவனருள் பெற்றே ஸித்திகள் அடைவார்!

40. அடியவன் துளஸீ தாஸன் வேண்டுவான்
அனைவர் உள்ளிலும் திருமால் உறையவே!

சங்கடம் நீக்கியே மங்களம் அருளும்
காற்றின் மைந்தனின் ரூபம்!
ராம யிலக்குவ சீதை யுடனே
என்றுமென் னுள்ளினில் வாழும்!

ஸ்ரீ ராமசந்திர பகவானுக்கு வெற்றி எனப் பாடு!

ராம இலக்குவ ஜானகீ
மாருதிக்கு வெற்றீயெனப் பாடு!
ராம இலக்குவ ஜானகீ

ஸ்ரீ ராம ஜெயம்

கெட்ட_கனவுகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க ...!




அடிக்கடி பயந்து அல்லது #கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், போன்றவர்கள் #பயம்நீங்க சொல்லவேண்டிய #ஹனுமான்__மந்திரம் :-

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
தேவ தானவ யக்ஷ ராக்ஷஸ பூத ப்ரேத பிசாச|
டாகினி சாகினி துஷ்ட க்ரஹ
‌பந்தனாய ராமதூதாய ஸ்வாஹா

       

பஞ்சபாத்ரம் என்று ஏன் சொல்லுகிறோம்? அதுக்கு ஏன் அப்பெயர் வந்தது?



பஞ்ச பாத்திரத்தை பற்றி மூன்று விதமான விவரங்கள் உண்டு.

முதலில் ஆராதனத்திற்க்கு பயன்படும் அந்த பஞ்ச பாத்திரம்  இயற் பெயர் 'பஞ்ச பத்ர பாத்திரம்' என்பர் பெரியோர்.

அதாவது அந்த பாத்திரத்தில் ஐவகை பத்திரங்களை(இலைகள்) அதிலுள்ள நீரில் இட்டு அந்நீரை உத்தரணி என்ற சிறு கரண்டியால் எடுத்து பூஜைக்கு,  ஆராதனைகளுக்கு பயன்படுத்துவதால் அப்பெயர்.

அது என்ன பஞ்ச பத்ரம்?

அதுவா துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள் என்பர்.

இந்த பத்திரங்களும் தீர்த்தமும் விடப்படும் பாத்திரம் 'பஞ்ச பத்ர பாத்திரம்'. இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது.

இந்த பத்திரங்கள் மூலிகைகளாகும்.  இந்த பத்ரங்கள் தெய்வீகமானவை பூஜைகளுக்கு ஏற்றவை.

இப்படியாக ஐந்து இலைகளையும் பகவத் கைங்கர்யத்திற்க்கு அர்ப்பணித்து அர்க்யம்,பாத்யம், ஆசமனியம் என தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

ஶ்ரீ வைஷ்ணவர்கள் விஷ்ணு பகவான் ஆராதனத்திற்கு  உகந்தது துளசிதளம் ( திருத்துழாய்).

ஸ்மார்த்தார்கள் ஆராதிக்கும் சிவனுக்கு உகந்தது வில்வம் என்பர் (பெருமாள் கோவிலிலும் வில்வ அர்ச்சனை செய்வர்).

சிவனின் பத்னியான அம்மனுக்கு வேப்பிலை உகந்தது.

அவரின் புத்திரனான விநாயகருக்கு அருகம் புல் உகந்தது.

படைப்பு தொழிலை கவனிக்கும் பிரம்மனுக்கு அத்தி இலை சிறப்பானது.

இப்படியாக ஐந்து பத்ரங்களை ஒவ்வொரு ஆராதனைக்கும் அவரவர்கள் உபயோகிப்பதால் பஞ்ச பத்ர பாத்ரம் என்பர்.

திருவாராதனத்தில் பகவானுக்கு அர்க்கியம், பாத்தியம், ஆசமனீயம், ஸ்நானீயம், சுத்தோதகம் என்று பஞ்ச உபசாரம் செய்ய உபயோகிப்பதால் அந்த ஐந்து நீர்வட்டில் பஞ்ச பாத்ரம்  என அழைக்கிறோம்.

பஞ்சபாத்திரம் = பஞ்ச+ பாத்திரம்.

பெரும்பாலும் இல்லத்தில் அல்லது நமது பெருமாள் கோவில்களில் 5 பாத்திரங்களில் பெருமாள் முன் தீர்த்தம் இருக்கும். ஆனால் தீர்த்த விநியோகம் செய்யும் போது ஒரு கிண்ணத்தில் உள்ள தீர்த்தத்தை மட்டுமே நமக்குத் தருகிறார்கள்.

பஞ்சோபசார பாத்ரம் என்றால் என்ன?

அதாவது பெருமாளுக்கு
அர்க்யம் -கைகளை சுத்தம் செய்ய
பாத்யம் - பாதங்களை சுத்திகரிக்க
ஆசமனீயம் - இது ஆசமனம்
ஸ்நானீயம் - திருமேனிக்கு
சர்வார்த்த தோயம் -

மேலே உள்ள உபசாரத்தை தவிர உள்ள மற்ற அனைத்து உபசாரங்களுக்கும் என பயன் படுத்துவதால் அந்த ஐந்து பாத்திரங்களையும் பஞ்ச பாத்திரங்கள் என்பர்.

அப்போ சொம்பு எதுக்கு?

மேலே சொல்லியுள்ள உபசாரங்களுக்கு தேவையான தீர்த்தத்தை வைப்பதற்க்கு அதில் இருந்து தீர்த்தம் எடுத்து தான் இந்த பஞ்ச பாத்திரங்களுக்கு தேவையான தீர்த்தத்தை விடுவார்கள்.

அப்படியானால் கோவிலில் தீர்த்த விநோயோகத்திற்கு எதில் இருந்து தீர்த்தம் தருவார்கள்?

அதாவது நமக்குக் கொண்டு வந்து கொடுக்கும் தீர்த்தம் சர்வார்த்த தோயம் என்ற அந்த ஐந்தாம் பாத்திரத்தில் இருந்து தருவார்கள்.

அந்த பாத்ரம் தான் நடுவில் வைக்கப்பட்டு இருக்கும். மற்ற அனைத்தின் உபசார தீர்தங்களும்  இந்த ஐந்தாவது பாத்திரத்திற்க்கே தான் போயும் வரவும் செய்யும்.
இந்த தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்களும் ஐந்தாகும்.

பச்சைக் கர்ப்பூரம் (ஶ்ரீவைஷ்ணவர்கள் மற்றும் பெருமாள் கோவில்களில் மட்டும் உபயோகிப்பர்).
ஏலக்காய், இலவங்கம் ஜாதிக்காய், வெட்டிவேர்.

இவற்றுடன் சிறிது மஞ்சள் கலந்து சில கோவில்களில் உபயோகிப்பர்.

மூன்றாவதாக பஞ்சபாத்ரம் என்று ஒரே ஒரு பாத்ரத்தை சொல்லுவர்.

பொதுவாக அந்த டம்ளர் போலுள்ள பாத்ரத்தை பஞ்சமுக பாத்ரம் என்பர்.

விளக்கில் தானே பஞ்சமுகம்?  நீர் பாத்ரத்துக்கும் பஞ்சமுகம் என்பதா?

பஞ்சமுகம்என்பதற்குஅர்த்தமே வேறு.

வியாக்கரண சாஸ்திரப்படி பஞ்ச என்றால் விஸ்தாரம் என்று பொருள்.

இந்த பாத்திரத்தின் முகப்பு மாத்திரம் நன்றாக விரிந்து பெரியதாகவும் உடம்பு ஒடுங்கி சிறுத்தும் இருப்பதால் இதற்கு பஞ்சமுகம் என்றும் பெயர்.

அதேபோல் திருவாராதனத்திற்க்கு உபயோகிக்கும் அந்த டம்ளர் போன்ற பாத்திரத்தின் தலைப்பாகம் விரிந்தும் உடல் சிறுத்தும் இருப்பதனால் அந்த பாத்திரத்தை மட்டும் கூட பஞ்ச பாத்திரம் என்று கூறுவர் பெரியோர்.

யோகம்



ஒரு சிலர் தியானத்தில் அமர்ந்திருப்பதைப் பார்க்கும் பொழுதே, அவர்கள் உள்ளுக்குள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது தெரிந்து விடும். முகம் தீவிரமாக எதையோ எட்டிப்பிடித்து விட வேண்டும் என்கிற பாவனையை வெளிப்படுத்தும். கண்கள் அசைந்து கொண்டேயிருக்கும். உடல் ஒரே நிலையில் இருக்காது. தன் இருப்பை மாற்றிக் கொண்டேயிருக்கும். கடுமையான போராட்டம் நடக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்து விடும். ஆனால், இவ்வளவு விரைப்புத் தன்மையும், போராட்டமும் தேவையில்லை. பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு, தியானத்தில் அமரும் பொழுது, குருவானவர் உடலையும், மனதையும் தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதை கேட்கலாம். அதுதான் தியானத்திற்கான சரியான நிலையாகும். இறுக்கமாக, கட்டுண்டு கிடக்கும் எந்த ஒரு இயக்கமும் சீராக நடைபெறாது.

யோகாசனம், உடற் பயிற்சிகள் எல்லாம் செய்து நன்றாக முறுக்கேறி விட்ட பிறகு, நாடி நரம்புகளை இளக்கி அதாவது நன்றாகத் தளர்த்தி விட வேண்டும் என்று சொல்வது இதற்காகத்தான். அப்பொழுதுதான் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிர் ஓட்டம் எல்லாம் சீராக நடைபெற்று, பயிற்சியின் பலன் நமக்கு முழுமையாகக் கிடைக்கும். அதைப் போலவே தியானம் செய்யும் பொழுது நம் அறிவையும் தளர்த்தி வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். பலதரப்பட்ட பற்றுகளால், உபாதைகளால், எண்ணங்களால் கட்டுண்டு கிடக்கின்ற அறிவை தளர்த்தி இயல்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அதன் இயக்கம் சீரான இயக்கமாக விளங்கும்.

நம் அறிவுதான் நம்மை பல்வேறு விஷயங்களில் கட்டிப் பிடித்து வைத்திருக்கிறது. எனவே அது சதா சர்வ காலமும் இறுக்கமான கடின நிலையிலேயே இருக்கிறது. நாம் எப்பொழுதும் நமது இந்த தேகத்தைதான் நாம் என்று எண்ணி வருகிறோம். அப்படிப்பட்ட எண்ணம் வலிமை அடைவதற்கு அறிவுதான் காரணமாக இருக்கிறது. நம்மை இந்த உலகாய விவகாரங்களில் பிணைத்து வைப்பது உடல் பற்றுதான். இந்த உடலை நான் என்று எண்ணுபவனுக்கு ஒரு நாளும் மனம் வசப்படாது, ஒரு நிலைப்படாது. இப்பொழுது ஒரு கேள்வி வருகிறது. தேகத்தை கவனிக்காமல் விட்டு விட்டால் துன்பங்கள் ஏற்படுமல்லவா ? உண்மைதான், உங்களை யார் தேகத்தை கவனிக்க வேண்டாம் என்று சொன்னது. உடலைப் பராமரிப்பது மிகவும் அவசியமாகும். ஆனால், அதன் மீது பற்று வைக்காதே என்றுதான் சொல்கிறார்கள்.

பற்றுதல் என்றால் விடாமல் பிடித்துக் கொள்ளுதல் என்பது பொருள். புலன்களைப் பற்றிக்கொண்டு மனதை அவற்றின் போக்கில் போக விடாதே என்று சொல்கிறார்கள். படகு போன்றது உடல். வாழ்க்கை எனும் பெருங்கடலைக் கடக்க பேருதவி செய்வது இந்த உடல்தான். எனவே அதை நன்றாகப் பராமரிக்க வேண்டும். அதில் ஓட்டை விழுந்தால் நம் பயணம் முற்றுப் பெறாமல் போய் விடும். அதற்காக படகை எப்பொழுதும் தலையில் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டுமா என்ன ? அதுதான் பற்று. தரைக்கு வரும் பொழுது படகை தண்ணீரில் விட்டு விட்டுதானே வீடு திரும்ப வேண்டும் ? இங்கே நிலைமையே வேறு. நாம் அனைவருமே படகைத் தலையில் சுமந்து கொண்டு திரிபவர்களாகவே இருக்கிறோம்.

இந்த வாழ்க்கை என்பதே உடலின் சௌகர்யத்திற்காக மட்டுமே என்று ஆகி விட்டது. வானத்திலிருந்து பூமி மீது விழுகின்ற நீரானது, அது விழுகின்ற இடத்தின் தன்மையை அடைகின்றது. உதாரணமாக ஆற்று நீர், கடல் நீர், சாக்கடை நீர், செம்மண்ணில் விழுவது சிகப்பாக இருக்கிறது, வண்டல் மண்ணில் விழுவது அது ஒரு நிறத்தில் இருக்கிறது. கரிசல் மண்ணில் விழும் நீர் அது ஒரு தன்மையை அடைகிறது. இது போல இடத்தின் தன்மையை நீர் பெற்றுக் கொள்கிறது. ஆனால், சூரியனின் கதிர் பட்டு ஆவியாகும் பொழுது அது இந்தத் தன்மைகள் அனைத்தையும் விட்டு விட்டு தூய நன்னீராக மேலே போய் விடுகிறது. அதற்குப் பிறகு தண்ணீருக்கு எந்த வித தன்மைகளோ, பேதங்களோ கிடையாது.

அது போலவே நாமும். பரமாத்மாவிடம் இருந்து வருகிறோம். ஜீவிப்பதற்காக இந்த உடலைப் பெற்று வந்தோம். உதவி வேண்டும், துணை வேண்டும் என்பதற்காக உறவுகளைப் பெற்றிருக்கிறோம். போகும் போது அனைத்தையும் விட்டு விட்டு தூய மனதுடன் போக வேண்டும்தானே ? ஆனால் அவ்வாறு போக முடிகிறதா ? முடியவில்லையே ? சொந்த இடம், சொந்த ஊர், சொந்த வீடு, மனைவி, மக்கள், உறவுகள் என்று பட்டியல் போய்க் கொண்டேயிருக்கிறது. இவற்றை எல்லாம் விட்டு விட்டு எப்படிப் போவது ? இதுதான் பற்று. அந்தந்த நிலையில் நம் கடமையை பற்றற்ற நிலையில் சிறப்பாக செய்ய வேண்டும். வாழ்க்கை எனும் நாடகம் முடியும் பொழுது வேசத்தை கலைத்து விட வேண்டும். பல்வேறு பற்றுகள், எண்ணங்கள், உபாதிகளில் சிக்குண்டு கிடக்கிற மனமானது இவற்றில் கட்டுண்டு, இறுகிக் கிடக்கிறது. அதைத் தளர்த்தி, இளகிய மனமாக ஆக்க வேண்டும் என்பது கோட்பாடு.

அதன் தளைகளை தளர்த்தி விட வேண்டும். தளைதல் என்றால் பிணைத்தல் என்று பொருள். அந்தக் கட்டுகளைத் தளைகளை அறுத்து அறிவைத் தளர்த்தி விடும் பொழுது, இந்த ஊரும், பேரும், உற்றார், உறவினரும், இனமும் எல்லாம் தனக்குரியது என்று எண்ணிக் கொண்டிருந்த அறிவும் இளகி விடுகிறது. அதற்குப் பிறகு அதைப் பற்றிப் பிடித்துள்ள பொருளற்ற பல்வேறு எண்ணங்களை எளிதில் நீக்கி விடலாம். பூமியில் விழுந்து அசுத்தமான நீர் மீண்டும் தூய நீர் ஆவது போல, அறிவும் இளகி தூய்மை பெறும் பொழுது அது ஆனந்த சொரூபமாக வடிவெடுக்கிறது. அழுக்கு படிந்த அறிவு துன்பத்தை ஏற்படுத்திக் கொள்கிறது. அழுக்குகள் நீங்கிய தூய அறிவு ஆனந்த சொரூபமாக ஆகி விடுகிறது. ஆக அறிவைத் தூய அறிவாக ஆக்குவதே ஆத்ம சாதனமேயன்றி, வேறில்லை. அறிவு பேரறிவாகத், தூய அறிவாக ஆவதே ஆனந்தம். அறிவு தூய்மை அடைந்து அடைந்து ஆனந்த சொரூபமாக மாறி மாறி முடிவில் பேரறிவு நிலையை எட்டும். அதுவே இணைத்தல். அதுவே யோகம். அதுவே வீடுபேறு.

இறைவனுக்கு பூஜைகள் செய்து இறைவனை ஏன் அலங்கரிக்கிறோம்


கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி இறைவனின் சிலையை, படத்தை  துடைத்து, அபிஷேகம்  பண்ணி,  பூவாலும், சந்தனத்தாலும், தங்க நகைகளாலும் ஏன் அலங்காரம் செய்து இறைவன்  பவனி வரும் பல்லக்கு தேர் போன்றவற்றையும் நாம் ஏன் அலங்காரம் செய்கிறோம்?

இறைவன் நம்மை கேட்டானா ? என்னை அலங்காரம் செய் என்று... இறைவன் நம்மிடம் கோரிக்கை வைத்தானா இல்லையே...! பின் எதற்கு இந்த அலங்காரம்?

மனித மனம் அலைபாயக்  கூடியது.
ஒரு  இடத்தில் நிலைத்து நில்லாதது. அதை ஒரு இடத்தில் நிலைக்க வைக்க வேண்டும் என்றால் மனக் கட்டுப்பாடு என்பது அவ்வளவு எளிதில் வருவது  இல்லை. முதலில் மனது  ஒன்றின் மேல் படிய பதிய வைக்க வேண்டும். மனம் அதில் லயிக்க வேண்டும். அதிலேயே மனம் கலக்க வேண்டும். அதற்கு நம் முன்னவர்கள் கண்ட வழி அலங்காரம். அதனால் தான் கோவிலை நமது அனைத்து புலன்களுக்கும் இன்பம் தரும்படி  அமைத்தார்கள்.

காதுக்கு இனிமையாக  பாடல்கள், நாதஸ்வரம், சொற்பொழிவுகள் என்றும், மூக்குக்கு இனிமையாக  கற்பூரம், ஊதுபத்தி, மலர்கள் என்றும், நாவுக்கு இனிமையாக பிரசாதம் என்றும், உடலுக்கு இனிமையாக நந்தவனக் காற்றும், கண்ணுக்கு இனிமை தர கோவில்  சிற்பங்கள், பெரிய  கோபுரங்கள், அழாகன மூர்த்தி  வடிவங்கள் என்று அந்த சிலைகளுக்கு அலங்காரம் என்று  வைத்தார்கள்.

இறைவனை எவ்வளவுக்கெவ்வளவு அலங்காரம் பண்ணுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நம் கண்ணுக்கு  இனிமை. உதாரணமாக
நம் குழந்தைகளுக்கு நாம் புதிது புதியதாய் ஆடை அணிகலன்கள் அணிவித்து  பார்த்து மகிழ்கிறோம் அல்லவா.? அது போல... அலங்காரம் பண்ணுவது நாம் கண்டு மகிழ. மனைவிக்கு பட்டுச் சேலை வாங்கித் தந்து அழகு  பார்ப்பது போல அவளுக்கு நகை அணிவித்து அழகு பார்க்கிறோம்.

இப்படி அழகை இரசிக்கும் போது
மனம் லயிக்கிறது. மனம் ஒன்று  படுகிறது. மனதில் ஆவல்  எழுகிறது.
ஒன்றை ரசிக்கும் போது ரசிப்பின் உச்சத்தில் கண்ணை மூடி அமர்ந்து கொள்கிறோம். கண்ணை மூடி ரசிக்கிறோம்... அது சிறந்த உணவாக  இருக்கட்டும், சிறந்த இசையாக இருக்கட்டும், நல்ல நறுமணமாக இருக்கட்டும், ரசனையின் உச்சம் கண் மூடி உள்ளுக்குள் அதை அனுபவிக்கிறோம்..

அதைப்போல இறைவனை, அவன் உருவத்தை சிங்காரம் பண்ணி பார்க்கும் போது  அதில் லயித்து அதை அப்படியே மனதில்  காண்போம்.
அது தான் தியானம். உருவத்தில் இருந்து உருவம் இல்லா அந்த சக்தியை அறிவதுதான் தியானம்.

உன்னைச் சிங்காரித்து
உன்னழகைப் பாராமல்....
என்னைச் சிங்காரித்து
இருந்தேன் பராபரமே.....!

உண்மை உணர்ந்தவர்கள்
இறைவா உன்னை சிங்காரித்து அழகு பார்க்காமல் என்னை சிங்காரித்து கொண்டு இருந்து விட்டேனே என்கிறார்.

அன்பர்களே நீங்களே சிந்தியுங்கள்
எது அழகு என்று?

கோயில்களில் இருக்கும் துவாரபாலகர்கள் யார்





அனைத்துக் கோயில்களிலும் கருவறைக்கு முன்பாக துவார பாலகர்கள் அருள்பாலிப்பார்கள். "பாலனம் என்றால் காப்பாற்றுதல் என்று பொருள்.

அந்தக் காலத்தில் அரசர்களுக்கு மெய்க்காப்பாளர்கள் இருந்ததைப் போலவும், தற்போது "Security" என்ற பெயரில் காவலர் இருப்பதைப் போலவும், கோயிலின் சாந்நித்தியத்தைக் காப்பாற்றுவதையே முதன்மையான கடமையாகக் கொண்டவர்கள் துவார பாலகர்கள்.

துவார பாலகர்களின அருள் இருந்தால் தான் நாம் இறைவனின் அருளைப்பெற முடியும்.

 கருவறையில் எழுந்தருளியிருக்கும் இறைவன் அனைத்தும் அறிந்தவர். நம்முடைய முன்வினைகள் என்னென்ன, நாம் எதற்காக வந்திருக்கிறோம் என்பதையெல்லாம் அறிந்து, முன்வினைகளுக்கு ஏற்ப சுக-துக்கங்களை அனுபவிக்கச் செய்து, நம்மைப் பக்குவப்படுத்தி, நிறைவாக இறைவனை அடைவதற்கு உரிய நிலையை நாம் பெறச் செய்யும் புனித இடம்தான் கோயில்.

எப்படி ஒரு CCTV Camera மூலம் அது பொருத்தப்பட்டிருக்கும் இடத்தில் நடக்கக்கூடிய காரியங்கள் பதிவு செய்யப் படுகின்றனவோ, அதேபோன்று கோயிலில் நடைபெறக்கூடிய அனைத்து நிகழ்வுகளும், துவாரபாலகர்களினால் கண்காணிக்கப்பட்டு, இறைவனிடம் தெரிவிக்கப்படுகின்றன.

அனைத்து தோஷங்களையும் நீக்கும் இரட்டை பிள்ளையார் வழிபாடு


ஒரு சமயம் சிவபெருமானை பிரிந்து பார்வதி தேவி தனியாகத் தவம் செய்ய நேரிட்டது. அப்போது விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி, அந்தத் திருவுருவத்தையே அதாவது தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தன் பெற்றோர் விரைவில் ஒன்று சேர பிரார்த்தித்தார். இதன் அடிப்படையில் மயிலாடுதுறை அருகிலுள்ள திருவேள்விக்குடித் திருத்தலத்தில் சங்கல்ப (இரட்டை) விநாயகர் என்ற பெயரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். ‘ஆதி இரட்டை விநாயகர்’ என்று போற்றப்படுபவரும் இவரே.

அது போலவே திருச்சி பாலக்கரைப் பக்கத்திலும் இரட்டைப் பிள்ளையார் அருள்புரிகிறார். பிள்ளையாருக்கு உரிய தேய்பிறை சதுர்த்தி திதி மட்டுமின்றி திருவோணம், திருவாதிரை, விசாக நட்சத்திரங்களும், திதிகளில் பஞ்சமியும் இவருக்குரியதாகக் கருதப்படுகிறது.

தேய்பிறை சதுர்த்தியில் இவருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும். மேலும் கார் அரிசியில் மோதகம் (கொழுக்கட்டை) செய்து நிவேதனம் செய்தால் சந்திரனால் ஏற்படும் தோஷம் விலகும்.

திருவோண நட்சத்திரத்தில் இந்த இரட்டைப் பிள்ளையாருக்கு மாம்பழங்கள் நிவேதனம் செய்து ஏழைத் தம்பதிகளுக்கு அளித்தால், கணவன்-மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

திருவாதிரையன்று வில்வத்தால் மாலை தொடுத்து இவரை வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும். ஆரோக்கியமாக வாழலாம். பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும். செல்வ வளம் பெருகும். விசாக நட்சத்திரத்தன்று இரட்டை விநாயகருக்கு பூக்களால் தொடுத்த போர்வை போன்ற மலர் ஆடை அணிவித்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

பொதுவாக, செவ்வாய்க் கிழமைகளில் வழிபட நாக தோஷம் விலகும், சனிக்கிழமைகளில் கனி வகைகளில் ஏதாவது ஒன்றைச் சம்ர்ப்பித்து வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும்.

தஞ்சை, திருவையாறு, ஐயாறப்பன் கோவிலில் உள்ளார் இரட்டைப் பிள்ளையார். இவர் சந்நிதிமுன் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். திருமணமாகாத பெண்கள் சந்தான அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்பட சங்கடஹர சதுர்த்தியில் அருகம்புல் மாலை அணிவித்து, மோதகங்கள் படைத்து வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தங்குதடையின்றி நிறைவேறும்.

மேலும் ஸ்ரீரங்கத்திற்கு அருகிலுள்ள உத்தமர்கோவில், திருச்சி உய்யகொண்டான் திருமலை சிவன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல் அடுத்த ஆறகலூரில் இருக்கும் கோவில், ஊட்டி பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள விநாயகர் கோவில் திருவண்ணாமலை போன்ற இடங்களிலும் இரட்டை விநாயகர் சந்நிதி உள்ளது.

இரட்டை விநாயகரை ஒரே சந்நிதியில் வழிபட்டால் இரு மடங்கு பலன்கள் கிடைக்கும்

புண்ணியம் என்பது என்ன?

நம்மிடம் உள்ளதை நம்மால்முடிந்ததை செய்வது.

மற்றவர்கள் நல்லாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் மட்டுமே புண்ணியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைப்பான்.

அப்படிப்பட்ட நல்ல மனம் ஒன்றே போதும் புண்ணியம் செய்வதற்கு.

ஆம் புண்ணியம் செய்ய மனம் வேண்டுமே தவிர பணம் தேவையில்லை.

உங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும் அதுவும் மற்றவர்களுக்காக இருக்கட்டும்.
இது தான் புண்ணியம்.

மற்றவர்களின் துக்கங்களை உங்களது என்று எண்ணி வருந்துங்கள்.

உங்களுக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களுக்காகவாது கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

அனைத்து உயிர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள்.

உங்களால் அனைவருக்கும் அன்பான ஆதரவான எண்ணங்களை அளிக்க முடியும் என்று எண்ணுங்கள்.

உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று நம்புங்கள்.

இறைவனை துணைக்கு அழையுங்கள்.

மற்றவர்களுக்காக உதவ இறைவனிடம் வேண்டுங்கள்.

தன்னல மற்ற எண்ணத்தை இவ்வுலகில் பரவ விடுங்கள்.

அனைவரும் உங்களுக்கு அன்பானவர்களாக மாறிவிடுவார்கள்.

உங்கள் உள்ளம் மகிழ்ச்சியாகி விடும். அனைவரும் நம்மதியாக வாழ்வார்கள் அந்த மகா புண்ணியம் உங்களை மட்டுமே வந்து சேரும்.

இந்த புண்ணியச் செயலுக்கு நீங்கள் செலவு செய்தது என்ன?
*
ஒன்றுமில்லையே. பைசா கூட செலவு செய்யவில்லை. எங்கும் அலையவில்லை. யாரிடமும் கோபம் கொள்ளவில்லை. பொய் கூறவில்லை. யாரிடமும் எதற்காகவும் கையேந்தவில்லை. யாரும் உங்களை குறைகூறப் போவதில்லை. எதையும் இழக்கவில்லை. எதையும் இழக்காமல் நீங்கள் புண்ணியத்தை மட்டுமே சம்பாதிக்கிறீர்கள்.

சரி,இதை எப்படி செயல் வடிவத்திற்கு கொண்டு வருவது என்பதை பார்ப்போம்.

இதை செயல் வடிவத்திற்கு கொண்டு வருவதுமிக எளிது.

தினமும் ஏதேனும் ஒரு நேரத்தில் யாராவது ஒருவர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதற்காக நேரம் காலம் பார்க்கத் தேவையில்லை.

எந்த நேரத்திலும் யாருக்காகவும் எண்ணிக் கொள்ளலாம்.

ஆரம்பத்தில் சொந்த பந்தங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

நாளடைவில் கண்ணில் படும் அனைவருக்காகவும் வேண்டிக் கொள்வீர்கள்.

நாட்கள் செல்ல செல்ல, நீங்கள் கேள்விப்பட்டவர்களுக்காகவும் அவர்கள் நல்ல முறையில் வாழ நீங்கள் எண்ணத் துவங்குவீர்கள்.

நீங்கள் வேண்டிக்கொள்ளும் நபர் பற்றி கவலைப் படாதீர்கள்.

அவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அவர் நல்ல முறையில் வாழ நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள்.

ஆம்புலன்ஸ் வண்டிச் சத்தம் கேட்கும் போதல்லாம் அதில் பயணம் செய்பவர் நல்ல முறையில் குணம் அடையஇறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்.

யாரோ ஒருவர் விபத்தில் அடிபட்டுவிட்டார் என்று கேள்விப்பட்டால் அவர் உடல் நலம்பெற எண்ணிக்கொள்ளுங்கள்.

மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிர்களிடமும் இந்தச் செயலை செய்யுங்கள்.

தெருவோரம் ஒரு மரம் வெட்டப்பட்டிருந்தால் அதற்காகவும் எண்ணிக் கொள்ளுங்கள்.
அந்த மரத்தை வெட்டியவர் மேலும் சில மரங்களை நடட்டும் என்று.

வெட்டப்பட்ட மரம் மற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவட்டும் என்று.

உலகத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்கட்டும் என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்ளாதீர்கள்.

ஒவ்வொருவரையும் நினைவில் வைத்து தனிப்பட்ட முறையில் அவர்களுக்காக அவர்கள் நன்மைக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

மிகப் பெரிய புண்ணியம் உங்களை வந்து சேரும்.

இப்படியெல்லாம் செய்ய முடியுமா? என்றால் நிச்சயம் செய்ய முடியும்.

இந்த எண்ணங்களுக்காக நீங்கள் பணமாக செலவு செய்ய வேண்டியது எதுவும் இல்லை.

ஆனால் இதன்மூலம் கிடைப்பதோ மிகப் பெரியபுண்ணியம்.

எனவே புண்ணியம் செய்ய எதுவும் பணம் ஏதும் தேவையில்லை ,நல்ல எண்ணங்களுடன் கூடிய நல்ல செயல்கள் உடன் கூடிய  மனம்இருந்தால் போதும்.

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...