பெண்களை அம்மனின் அம்சமாக கூறுவது ஏன்..?



கோயிலில் உள்ள அம்மனுக்கு பட்டுப்புடவை கட்டி மலர் மாலை சூட்டினாலும், தாலி, தோடு, மூக்குத்தி,  வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகியஅணிகலன்கள் அணிவித்தாலே அலங்காரம் முழுமையடையும்.

பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவேதான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.

1.தாலி –தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.

2. தோடு –எதையும் காதோடு போட்டுக்கொள்.  வெளியில் சொல்லாதே !

3. மூக்குத்தி – மூக்குதான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.

4. வளையல் –
கணவன் உன்னை வளைய, வளைய வர  வேண்டும், என்பதற்காக,

5. ஒட்டியாணம் –
கணவன், மனைவி இருவரும் ஈருடல்  ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக !

6. மோதிரம் –
எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.

இவை தவிர நகைகள் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்காக உருவானவை, அதிகமான ஆபரணங்கள்தங்கத்தில் அணியப்படுவதன் காரணம்வெப்பமான நாடுகளில் வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது.
அத்துடன் தங்கம் எப்பொழுதும் எமது உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.

7,கொலுசு:
பொதுவாக எல்லா நகைகளையும்  தங்கத்தில் அணியும் நாம், காலில்  அணியும் நகைகளை வெள்ளியில்தான் அணிகிறோம்.
இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமிஇருப்பதால் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன்வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும்.
வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினைதொட்டுக்கொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக்குறைத்து கட்டுப்படுத்துகிறது.

8.மெட்டி:
மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால்  விரல்களிலேயே இருக்கிறது.வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்தசக்தி கால் நரம்புகளில்  ஊடுருவி நோய்களை தடுக்கும்  ஆற்றல் உள்ளது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.

9.மோதிரம்:
விரல்களில் அணியப்படும் மோதிரம் பதற்றத்தை குறைக்கவும்,  இனிமையான பேச்சுத்திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது.
அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளைஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது. விரல்களில் மோதிரம்  அணிவதால் இதயக்கோளாறுகள்  மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கவும்  உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது.

10.மூக்குத்தி:
மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும்கூட நவீன உலகில் முக்கியத்துவம் பெறுகிறது. பருவப்பெண்களுக்கு  மண்டை ஓட்டுப்பகுதியில் சில வாயுக்கள்காணப்படுகிறது. இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்குத்தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு  மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும்பலமான வலுவான பகுதிகளாகும்.
வலது புறமாக சுவாசம் செல்லும் போதுதான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி.

சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி, மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது.

11.காதணி:
தோடு என்பது காதில் அணியும் ஆபரணம். பெண்கள்; அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களும் அணிவார்கள். காது குத்துதல் என்பது சமூகத்தில் ஒருமுக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காதில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே ஆகும்.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...