சிவ சிவ என்கிலர் தீ வினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே.
_ திருமூலர் திருமந்திரம்
பாடலின் பொருள் :
*"சிவ சிவ என்கிலர் தீ வினை யாளர்"*
ஆதாவது, முப்பிறவியின் தீய வினை செய்து இப்பிறப்பிலும் பாவங்கள் செய்து வருபவர் நாவில் *"சிவ சிவ"* என்ற சொல் வராது...
*"சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்"*
அவ்வாறு பாவ செயல் செய்து வருபவர் *"சிவ சிவ"* என்று சொல்லிவிட்டால்.... அவர்கள் தீய வினைகள் எரிந்து விடும். மேலும் அவர்களை பாவங்கள் செய்யாமல் தடுக்கும்.
*"சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்"*
இவ்வாறு பாவங்கள் செய்ய விடாமல்,.... நன்மைகள் பல புரிய செய்து.. . தேவர்கள் ஆவார்கள்.
*"சிவ சிவ என்னச் சிவகதி தானே"*
தேவர்கள் ஆன பின்... *"சிவ சிவ"* என்றே பேரானந்தத்தில் சிவத்தில் ஆன்மா ஒடுங்கும்
No comments:
Post a Comment