நெய், வெண்ணெய் எதுல கொழுப்பு அதிகம்? எது உடம்புக்கு நல்லது?

ஆரோக்கியத்திற்குச் சிறந்தது நெய்யா, வெண்ணெயா என்ற விவாதம் பட்டிமண்டபம் போன்று தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. 'பால்' என்ற ஒரே மூலப்பொருளிலிருந்தே நெய், வெண்ணெய் இரண்டும் பெறப்படுகின்றன. இரண்டுக்கும் பல விஷயங்கள் பொதுவாய் உள்ளன.

பாலில் இருந்து நெய், வெண்ணெய் இரண்டும் பெறப்படுகின்றன. வெண்ணெயில் அதிக அளவு கொழுப்பு இருப்பதால், கொலஸ்ட்ரால் அளவுகள் கூடுவதற்குக் காரணமாகிறது. ஏற்கனவே இதய நோய் இருப்பவர்களுக்கு மாரடைப்பு, ஸ்ட்ரோக் என்னும் மூளையில் இரத்தக்குழாய் அடைப்பு, இதய இரத்தநாளம் சம்மந்தப்பட்ட நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவை ஏற்பட வாய்ப்பு அதிகம்.

வெண்ணெய்

'வெண்ணெய் வெட்டி சிப்பாய்' 'கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடித்தல்' போன்ற பல சொற்றொடர்கள் தமிழில் புழக்கத்தில் இருந்து வருகின்றன. இதைக் கொண்டு தமிழ்ச்சமுதாய வாழ்வில் வெண்ணெய் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

பாலிலிருந்து கிடைக்கும் தயிரை கடைந்து கொழுப்பை பிரித்தெடுத்து வெண்ணெய் பெறப்படுகிறது. பட்டர்ஃபேட் என்னும் இயற்கையான கொழுப்பு வெண்ணெயில் அதிகம் காணப்படுகிறது.

அதாவது வெண்ணெயில் ஏறத்தாழ 80 விழுக்காடு பட்டர்ஃபேட் என்ற இயற்கை கொழுப்பு உள்ளது. எஞ்சிய விழுக்காடு நீர், பால் புரதம், சில சமயத்தில் சோடியம் ஆகியவற்றால் நிரப்பப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 10 கிராம் வெண்ணெயில் 5 கிராம் பூரிதகொழுப்பு, 2 கிராம் மோனோ பூரிதமில்லா கொழுப்பு ஆகியவையும் சிறிதளவு பலபடித்தான பூரிதமில்லா கொழுப்பும் காணப்படுகிறது. வைட்டமின்கள் ஏ, டி மற்றும் ஈ ஆகியவையும் ஓரளவுக்குக் காணப்படுகின்றன.

வெண்ணெயின் பயன்கள்

பிரெட் என்னும் ரொட்டி மற்றும் அதன் டோஸ்ட் மீது பூசுவதற்கு, மசித்த உருளைக்கிழங்கு மற்றும் சமைத்த காய்கறிகளுடன் மற்றும் பல சமையல், பேக்கரி பண்டங்கள், பல்வேறு உணவுகள் தயாரிக்க வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

வெண்ணெய் நண்பனா? பகைவனா?

வெண்ணெயில் அதிக அளவு பூரித கொழுப்பு இருப்பதால், செரம் லிப்பிடு என்ற கொழுப்பு மற்றும் முழு கொலஸ்ட்ரால் அளவுகள் கூடுவதற்குக் காரணமாகிறது. ஏற்கனவே இதய நோய் இருப்பவர்களுக்கு மாரடைப்பு, ஸ்ட்ரோக் என்னும் மூளையில் இரத்தக்குழாய் அடைப்பு, இதய இரத்தநாளம் சம்மந்தப்பட்ட நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவை ஏற்படுவதற்கு வெண்ணெய் வழிவகுத்து விடும்.

தினசரி எடுத்துக்கொள்ளும் கலோரியில் 7 விழுக்காட்டுக்கும் அதிகமாக பூரித கொழுப்பின் அளவு இருக்கலாகாது என்று உடல் நலம் மற்றும் உணவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆகவே, கூடுமானவரைக்கும் குறைந்த அளவே வெண்ணெய் சாப்பிடுவது நல்லது.

நெய்

வெண்ணெயை உருக்கி, அதிலுள்ள நீரை முற்றிலுமாக நீக்கி, காய்ச்சுவதன் மூலம் அசுத்தங்கள், மாசு ஆகியவற்றையும் வெளியேற்றிய பின்னர் கிடைப்பதே நெய். லாக்டோஸ் உள்ளிட்ட பால் சார்ந்த புரதங்கள் வெண்ணெயிலிருந்து நீக்கப்படுகின்றன. இந்தியாவில் நெய் மிகவும் முக்கியமானது. பல்வேறு சமையல்களில் இது பயன்படுத்தப்படுகிறது.

வெண்ணெயில் 80 விழுக்காடு கொழுப்பு காணப்படுகிறது;நெய்யிலோ 99.5 விழுக்காடு கொழுப்பு உள்ளது. ஆனால், வெண்ணெயைக் காட்டிலும் நெய்யின் புகைநிலை அதிகமாகும். 500 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில்தான் நெய் சூடாகி, புகை வெளிவர ஆரம்பிக்கும். உணவுக்கு வெண்ணெயை காட்டிலும் அதிக சுவை கொடுக்கும் ஆற்றல் நெய்க்கு உண்டு.

நெய்யின் பயன்கள்

சமையலுக்கு பயன்படுகிறது. வதக்குவதற்கு, கிளறி பொரிப்பதற்கு மற்றும் முற்றிலும் பொரிப்பதற்கு என்று பல வகைகளில் நெய் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருந்துகளிலும் நெய் இடம்பெறுகிறது.

சில ஆய்வுகள், நெய் கொலஸ்ட்ரால் அளவை மட்டுப்படுத்தி, இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருவதாக கூறுவதாக கருதப்படுகிறது. நெய்யில் பூரித கொழுப்பு அதிக அளவில் இருப்பதால் இதய ஆரோக்கியம் குறித்த இந்தக் கருத்தை உறுதி செய்வதற்கு மேற்கொண்டு ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

எது உடலுக்கு நல்லது?

பூரிதம் மற்றும் மோனோபூரிதமற்ற கொழுப்புகள் வெண்ணெய், நெய் இரண்டிலுமே அதிக அளவு உள்ளன. இரண்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஆகவே, இரண்டையும் அளவாக சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்லது.

லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாதவர்கள் வெண்ணெயை சேர்த்துக்கொண்டால் அஜீரணம் ஏற்படலாம். ஆனால், நெய் சாப்பிட்டால் இதுபோன்ற விளைவுகள் ஏற்படாது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். என்னதான் சுவை மிகுந்ததாக இருந்தாலும் நெய்யை மட்டுமல்ல, வெண்ணெயையும் மட்டாய் சாப்பிடுவதே நல்லது.

தூதுவளையின் மருத்துவ பயன்கள்

*தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.*

*தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,* *பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளைக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.*
*வாதம் மற்றும் பித்தத்தால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த மிளகு கல்பகம் 48 நாட்கள் சாப்பிட்டபின்,* *தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத, பித்த நோய்கள் தீரும்.*

*தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை,*
*மாலை என இருவேளையும் தேனில் கலந்து பத்தியம் இருந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும்.* *உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.*
*ஜீரண சக்தியைத் தூண்டும்.*

*தூதுவளையை நன்கு அரைத்து* *அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல்,* *நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்தாகும்.*

*மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு,* *பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்து.* *தூதுவளைக் காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒரு மண்டலம் கற்பக முறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய் நீங்கும்.*

*தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும்.* *தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல், நீங்கும்.*

*பாம்பின் விஷத்தை முறிக்கும்.*
*தூதுவளைக் கீரை, வேர், காய்,* *இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல், கண் நோய்கள் நீங்கும்.*

*தூதுவளை* *இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல்,* *இரைப்பு நோய் அணுகாது.*
*மேற்கண்ட கற்பக முறைப்படி தூதுவளையை உண்டு வந்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

வேப்பஎண்ணெயின்_அற்புத_மருத்துவபயன்கள்

1. வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப விதை தூளை முகத்தில் தடவி வர தோல் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றத்தை அளிக்கும்.

2.வேப்ப எண்ணெய் தடவுவதால் தோல் மென்மையாகும்.

3.நீர் சத்து இழந்து தோல் வறட்சியாவதை தடுக்கிறது .

4. தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிரங்கு போக்கக்கூடியது.

5. குளிர்காலங்களில் ஏற்படும் தோல் வெடிப்பை போக்கும்.

6. தோல் அலர்ஜிக்கு சிறந்த மருந்து .

7. காயம் ஏற்பட்ட இடத்தில் தடவினால் சீக்கரம் காயம் குணமடையும்

8. தோல் வறட்சியை போக்கும்.

9. வேப்ப எண்ணெயில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளததால் கிருமி தோற்று ஏற்படுவதை தடுக்கும்.

10. தொடர்ந்து வேப்ப எண்ணெய் உடலில் தடவி வந்தால் சருமம் மெருகேறும்.

11. கரும்புள்ளிகள் மறையும் .

12. படர் தாமரை, கருவளையம் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்து.

13. தேங்காய் எண்ணெயில் 10:1 என்ற விகிதத்தில் வேப்பெண்ணெய் கலந்து கூந்தலுக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.

14. தலை பேன் பிரச்சனை நீங்கும்.

15. அடர்த்தியான கூந்தைளை பெறலாம்.

16. முடி பிளவை தடுக்கும்.
தோல் மற்றும் முடி தவிர, வேப்ப எண்ணெய் புண்கள், புற்றுநோய் மற்றும் நாட்பட்ட வைரஸ் தொற்று போன்ற பல உடற்கூறான வியாதிகளுக்கு நம்பகமான தீர்வாகும். வேப்ப எண்ணெயில் சில சுகாதார நலன்கள் உள்ளன.

17. அஜீரண கோளாறு மற்றும் வயிற்று புண்ணுக்கு உகந்தது.

18. வாய் துர்நாற்றத்தை போக்கும்.

19. இதனை புற்று நோய் உள்ளவர்களுக்கு
மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்

20. வேப்ப எண்ணெய் அனைத்து பல் பிரச்சினைகளுக்கும் ஒரு மிகவும் பயனுள்ள வாய்மொழி தீர்வு. ஈறுகள், பல்வலி அல்லது மூச்சுத் திணறல், இரத்தக் கசிவு, வேப்பிலுள்ள ஆண்டிசெப்டிக் பண்புகள் ஈறுகளையும் பற்களையும் ஆரோக்கியமாக வைக்க நிரூபிக்கப்பட்டுள்ளன.

21. கொசு தொல்லையில் இருந்து விடுபட வேப்ப எண்ணையில் விளக்கை ஏற்றினால் கொசு தொல்லை இருக்காது.

22. சில சொட்டு வேப்ப எண்ணெயை நீர் சேமித்து வைக்கும் தொட்டியில் தெளித்தால் கொசு புழுக்கள் உருவாவதை தடுக்கலாம்.

இன்னும் எண்ணற்ற நலன்கள் வேப்ப எண்ணெய்யில் உள்ளது.
நல்ல தூய்மையான கலப்படம் இல்லா எண்ணெயை பயன் படுத்துங்கள்.

உமீழ் நீர்:உயிர் நீர்

*சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான,  இயற்கை மருந்து!!

```சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?```

```உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!```

```உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் ,  அதிக அளவு  எடுத்துக் கொண்டனர்!!```

```வாழ்வதற்காக  உண்டனர்!  உண்பதற்காக வாழ்ந்தனர்!```

```அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!```

```அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்!!```

   ```உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை!!```

```"தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது!```

```நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்!!```

```தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்!!```

```அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.  உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது!```

```வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்!```

```உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்!!```

```நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது!```

```உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்!```

```நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது!!```

```சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்!!```
```எனவே; நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்!```

```நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட  உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்!!```

```நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்!!```

நொறுங்கத் தின்னா நூறு வயசு..

எது கெடும் ?

01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.

11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.

21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும்  கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.

31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.

41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.

51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.
கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு

சில பயனுள்ள தகவல்கள்...!

1.கோயில்கள்,நதிக்கரைகள்,பசுமடம்,மகான்களின் சமாதி
இந்த இடத்தில், தீபம் ஏற்றி வழிபட்டால்,நமது தரித்திரம் விலகும்.புத்தியிலும்,மனத்திலும் உள்ள குழப்பங்கள் நீங்கும்.

2.திங்கள், புதன், வியாழன் திருமணத்தை நடத்த உகந்த நாட்கள் என்று சோதிட நூல்கள் சொல்கிறது .

3.வெள்ளி அன்று நரசிம்மர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு ஒரு அம்பாள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்தால் பிரிந்தவர் சேர்வர்

செவ்வாய் அன்று தரிசனம் செய்து வந்தால் கடன் எளிதில் முடிய வழி கிடைக்கும் ,

புதன் அன்று தரிசனம் செய்து வந்தால் நல்ல உத்தியோகம் அமையும்

4.ஒரே வீட்டில் இரண்டு அடுப்பு வைத்து சமைக்க கூடாது (அதாவது கூட்டு குடும்பமாக இருந்து சண்டை போட்டு கொண்டு மாமியார் மருமகள் தனி தனியாக சமைப்பது,அல்லது சகோதரர்கள் ஒன்றாக இருந்து சமைப்பது ,அல்லது பிறருடன் ஒரே வீட்டில் இருந்து கொண்டு வாழ்வது )

5.வீட்டில் உள்ள ஆண்கள் விளக்கு தீபம் ,அடுப்பில் நெருப்பு போன்றதை பற்ற வைக்க கூடாது ..(பெண்களின் கைகளில் அக்னி உள்ளது ,இவர்கள் தான் ஏற்ற வேண்டும் என்று சோதிட நூல்கள் சொல்கிறது )
( இதற்கும் தொழிலுக்கும் சம்பம்தம் கிடையாது )

6.ஜபம் செய்யும் திசையும் பலனும்.....

a.கிழக்கு(East) நோக்கு ஜபம் செய்தால் வசியம்

b.தென்கிழக்கு(Southeast) நோக்கி ஜபம் செய்தால் நோய் தீரும்

c .தெற்கு(South) நோக்கி ஜபம் செய்தால் பெரும் தீமை

d . தென்மேற்கு(Southwestern) நோக்கு ஜபம் செய்தால் வருமை

e . மேற்கு(West) நோக்கு ஜபம் செய்தால் பொருட்செலவு

f . வடமேற்கு(Northwest) நோக்கி ஜபம் செய்தால் தீயசக்திகளை ஓட்டுதல்

g .வடக்கு(North) நோக்கி ஜபம் செய்தால் தங்கம் கல்வி கிடைக்கும்

h .வடகிழ்க்கு(Northeast) நோக்கி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும்....

ஜபம் செய்யும் இடமும் பலனும்......

i வீடு- பத்து மடங்கு பலன் பலன்

j.கோவில் அல்லது வனம் நூறு மடங்கு பலன்

k.குளம்- ஆயிரம் மடங்கு பலன்

l.ஆற்றங்கரை லட்சம் மடங்கு பலன்

m.மலை உட்சி ஒரு கோடி மடங்கு பலன்

n.சிவன் கோயில் இரண்டு கோடி மடங்கு பலன்

o.அம்பிகை சன்னிதி பத்து மடங்கு பலன்

p.சிவன் சன்னிதி பல கோடி மடங்கு பலன்....
சோதிட தகவல் ..

1.பிரதமை அன்று பிறந்தவர்கள்
அம்பிகைக்கு நெய் படைத்து வழிபடவேண்டும்.

2. துவிதியை அன்று பிறந்தவர்கள்
சர்க்கரை படைத்து வழிபடவேண்டும்

.
3. திருதியை அன்று பிறந்தவர்கள்
பால் படைத்து வழிபடவேண்டும்.

4. சதுர்த்தி அன்று பிறந்தவர்கள்
பட்சணம் படைத்து வழிபடவேண்டும்
.

5. பஞ்சமி அன்று பிறந்தவர்கள்
வாழைப் பழம் படைத்து வழிபடவேண்டும்
.

6. சஷ்டி அன்று பிறந்தவர்கள்
தேன் படைத்து வழிபடவேண்டும்.

7. சப்தமி அன்று பிறந்தவர்கள்
வெல்லம் படைத்து வழிபடவேண்டும்
.
8. அஷ்டமி அன்று பிறந்தவர்கள்
தேங்காய் படைத்து வழிபடவேண்டும்.

9. நவமி அன்று பிறந்தவர்கள்
நெற்பொறி படைத்து வழிபடவேண்டும்.

10. தசமி அன்று பிறந்தவர்கள்
கருப்பு எள் படைத்து வழிபடவேண்டும்.

11. ஏகாதசி அன்று பிறந்தவர்கள்
தயிர் படைத்து வழிபடவேண்டும்.

12. துவாதசி அன்று பிறந்தவர்கள்
அவல் படைத்து வழிபடவேண்டும்.

13. திரயோதசி அன்று பிறந்தவர்கள்
கடலை படைத்து வழிபடவேண்டும்.

14. சதுர்த்தசி அன்று பிறந்தவர்கள்
சத்துமாவு படைத்து வழிபடவேண்டும்.

15. பௌர்ணமி/ அமாவாசை அன்று பிறந்தவர்கள் பாயசம் படைத்து வழிபடவேண்டும்

இவைகளை யாருக்காவது தானம் செய்தாலும் உங்களுக்கு புண்ணிய பலன் கிடைக்கும்.

நீங்கள் விரும்பும் தெய்வத்திற்கு படைப்பதும் குறிப்பாக அம்பாளுக்கு படைப்பது சிறந்தது .....

பூ ஏன் வைக்கிறோம் என்று உங்களுக்கு தெரியுமா?

பூக்களும் மருத்துவ குணமும் !!

அதிக மகசூலும், லாபமும் தரக்கூடிய பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அந்த பூக்கள் பலவும் மருத்துவ குணம் கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

உலகில், 25 சதவீத மலர்களானது மருத்துவ குணம் கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.

🌸 பெண்கள் தலையில் பூச்சூடுவதால் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. மேலும் உடல்நலத்துக்கு நன்மை பயக்கிறது.

🌼 பூக்களில் ஒன்றான ரோஜாப்பூ, தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றை குணப்படுத்தும்.

🌸 மல்லிகைப்பூ மன அமைதிக்கு உதவும் மற்றும் கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.

🌸 செண்பகப்பூ வாதத்தை குணப்படுத்தும், பார்வைத்திறனை மேம்படுத்தும்.

🌼 பாதிரிப்பூ செவி கோளாறுகளை சீர்படுத்தும், செரிமான சக்தியை மேம்படுத்தும், காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றை சரிசெய்யும்.

🌼 செம்பருத்திப் பூ தலைமுடி தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்யும், உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

🌼 மகிழம் பூ தலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட குறைபாடுகளை நீக்கும்.

🌸 வில்வப்பூ சுவாசத்தை சீராக்கும். காசநோயை குணப்படுத்தும்.

🌼 சித்தகத்திப்பூ தலைவலியைப் போக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

🌼 தாழம்பூ நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.

🌸 தாமரைப்பூ தலை எரிச்சல், தலைச்சுற்றல் போன்றவற்றை சரிசெய்யும், மன உளைச்சலை நீக்கி அமைதி கொடுக்கும், தூக்கமின்மையைப் போக்கி, சீரான தூக்கத்தை அளிக்கும்.

🌼 கனகாம்பரம் பூ தலைவலி மற்றும் தலை பாரத்தை சரிசெய்யும்.

🌸 தாழம்பூ, மகிழம் பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ, செண்பகப்பூ போன்ற மலர்கள் வாதம், கபம் போன்றவற்றை சரிசெய்யும்.

🌸 நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பூக்களிலும் நன்மைகள் உள்ளது. அதனை அறிந்து பயன்படுத்தினால் நலத்துடன் வாழலாம்....

இடுப்புக்கு கீழே எந்த பிரச்சினை இருந்தாலும், இந்தக் கீரை இருந்தால் போதும்!

இந்த அதிசயமான கீரையின் பெயர் துத்தி.அழகான மஞ்சள் பூக்களுடன் மூன்றடி உயரம் வரை வளரக்கூடிய துத்திச் செடியை தென்னிந்தியா முழுவதும் சாலை ஓரங்களிலேயே சாதாதரணமாகப் பார்க்கலாம்.

இதில் மொத்தம் 29 வகைகள் இருக்கின்றன.வட்டத்துத்தி,பெருந்துத்தி,
சிறுதுத்தி,கருந்துத்தி,காட்டுதுத்தி என பட்டியல் நீளும்.இதில் நிலத்துத்தி அல்லது பனியாரத் துத்தி எனப்படும் வகைதான் மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டது.

இதன் இலைகள் இதய வடிவில் இருக்கும்.இதன் பூக்கள்.அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.காய்கள் வட்ட வடிவில் ஒரு பச்சை நிற தோடு போல் இருக்கும்.துத்தியின்  வேர்முதல்,இலைகள்,பூ,விதைகள் அனைத்தையுமே  சிறப்பான நாட்டு மருந்துகளாக பயன் படுத்தலாம்.

முதலில் இதன் வேரில் இருந்து துவங்குவோம்.துத்திச் செடியி வேரை நன்றாகக் கழுவி நீரில் ஒரு பதினைந்து நிமிடம் கொதிக்கவிட்டு வடிகட்டி பருகிவந்தால் உடலின் நரம்பு மண்டலம் பலமடையும்.துத்தி வேருடன் மூக்கிரட்டை வேரையும் சேர்த்து காய்ச்சி சிறிது தேன் கலந்து பருகிவர சிறு நீரக கோளாருகள் சுகமாகும்.

துத்தி இலையை சின்ன வெங்காயம்,பாசிப் பருப்புச்சேர்த்து கூட்டாகச் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.துத்தி இலையை அரைத்து தோசைமாவில் கலந்து தோசையாகச் செய்தும் சாப்பிடலாம்.முழங்கால்,கால் பாதம் போன்ற இடங்களில் சிறுநீரகக் கோளாறுகளால் வீக்கம் ஏற்படும்போது,துத்தி இலையை நீரில் போட்டு வேகவைத்து அதில் துணியை நனைத்து வீக்கம் உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் வீக்கம் குறையும்

துத்தி இலையையும் வேலிப்பருத்தி இலையையும் சமஅளவில் எடுத்து அதனை சாறு பிழிந்து (200 மில்லி அளவுக்கு) அந்தச் சாற்றால் பல் கூச்சம்,பல் வலி,ஈறுகளில் ரத்தம் கசிவது போன்ற துண்பங்களில் இருந்து விடுதலை பெறலாம்.

நாள் முழுதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதாலும்,நீண்ட தூரம் பயணம் செய்வதாலும்,புரோட்டா போன்ற துரித உணவுகளை உண்பதாலும் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இது அரு மருந்து.துத்தி இலையில் சூப் செய்தோ,இதன் சாற்றுடன் பால்,தேன் கலந்தோ சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும்.

நாட்பட்ட வெளி மூலம் இதத்த மூலம் உள்ளவர்கள்,துத்தி இலையை ஆமனக்கு எண்ணையில் வதக்கி ஒரு வெற்றிலையில் வைத்து ஆசனவாயில் வைத்து கட்டிக்கொண்டு வர நாட்பட்ட மூல வியாதி குணமாகும்.

அடுத்தது துத்தி பூ.இதை நிழலில் நன்றாக உலர்த்தி பொடியாக்கி அதனுடன்,பாலும் பனங்கற்கண்டும் சேர்த்து பருகிவந்தால் நுரையீரல் கபம், இருமல், இரைப்பு, காசநோய்,இரத்த வாந்தி முதலியவை குணமாகும் என்று அகத்தியர் நாடி சொல்கிறது.

துத்திக்காயில் உள்ள விதைகளை இடித்து பொடியாக்கி,அதனுடன் கற்கண்டும், தேனும் சேர்த்து சாப்பிட்டு வரவெண்மேகம், உடற்சூடு, கை கால்களில் படரும் சரும நோய்கள்,வெள்ளை படுதல் ஆகியவையும் குணமாகும்.

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...