அருகம்புல் சாறு குடிக்க வேண்டும்

தினமும் காலையில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.
அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்:
1. நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
2. இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
3. வயிற்றுப் புண் குணமாகும்.
4. இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
5. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
6. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
7. நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
8. மலச்சிக்கல் நீங்கும்.
9. புற்று நோய்க்கு நல்ல மருந்து.
10. உடல் இளைக்க உதவும்
11. இரவில் நல்ல தூக்கம் வரும்.
12. பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
13. மூட்டு வலி நீங்கும்.
14. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
15. நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.
16. அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.
17. அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது.
18. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.
அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.

What is Maturity of Mind ? Our life will be simple if only we practice 7 or 8 of the above 12

1. Correcting ourselves without trying to correct others.

2. Accepting others with their short comings.

3. Understanding the opinions of others from their perspectives.

4. Learning to leave what are to be avoided.

5. Leaving the expectations from others.

6. Doing whatever we do with peace of mind

7. Avoiding proving our intelligence on others

8. Avoiding the status those others should accept our actions.

9. Avoiding the comparisons of ourselves with others

10. Trying to keep our peace in our mind without worrying for anything.

11. Understanding the difference between the basic needs and what we want.

12. Reaching the status that happiness is not connected with material things.

Our life will be simple if only we practice 7 or 8 of the above 12

பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது?

பிரச்சனை என்றால் என்ன? அதற்க்கு ஏதாவது உருவம் உண்டா? நிச்சயமாக கிடையாது.

மனிதர்களாகிய நாம் கொடுக்கும் உருவமும் அர்த்தமும்தான் ஒரு நிகழ்வை பிரச்சனையாக எடுத்து கொள்வது.

ஒரு நிகழ்வை உணர்ச்சிபூர்வமாக அணுகும்போது அது சாதாரண நிகழ்வாக இருந்தாலும் அதற்கு கொடுக்கும் பெயர் பிரச்னை.

இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையான பிரச்னைகள் நம் எண்ணங்களில்தான் இருக்கின்றன.

''இன்று நம்மில் பலர் சூழ்நிலையைக் காரணம் காட்டி தமது வாழ்க்கையை தாமே கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்று பெரிய மனிதர்களாக இருக்கும் பலரும் மிகவும் ஏழ்மையான பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள்தான்.

நமக்கு வரும் பிரச்சனைகள் பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ, பணி செய்யும் மேலதிகாரிலிடமோ நம் சூழ்நிலையிலோ இல்லை. அது நம் மனதில் இருக்கிறது.

ஒரு பிரபலமான தனியார் நிறுவனத்தில் மதிய உணவு இடை வேளையில் அதிகாரிகள் சிரித்துப் பேசி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

ஒருநாள், அவர்களுக்குள் ஒரு போட்டி. கனமான ஒரு பொருளை (மேஜையில் காகிதங்கள் பறக்காமல் இருக்க வைக்கப்படும்.( பேப்பர் வெயிட்) தலையில் வைத்தபடி சிறிது தூரம் நடக்க வேண்டும்.

ஒரு முறை ஒரு அதிகாரியின் தலையில் பேப்பர் வெயிட்டை வைத்தார்கள்.

அந்த அதிகாரி பாவம்.. தலையில் இருக்கும் பொருள் கீழே விழுந்து விடப் போகிறதே என்ற பயத்தில் வளைந்து நெளிந்து நடந்து கொண்டிருந்தார்.

பாதி தூரம் கடந்தவுடன் ""என்னால டென்ஷன் தாங்க முடியலப்பா'' என்று போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்."

"உங்கள் தலையில வச்ச பேப்பர் வெயிட்டை நீங்கள் நடக்க ஆரம்பிக்கும் முன்பே எடுத்து விட்டோம்.
இல்லாத ஒரு பொருளுக்காக நீங்க உடம்பை வளைத்து வளைத்து நடந்த காட்சி இருக்கிறதே! பிரமாதம் என்றார்கள்..

ஆம்.,நண்பர்களே..,

இது நகைச்சுவை அல்ல;

இது வாழ்வியல் விளக்கம்.

இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக் கொண்டும்,நாமே உருவாக்கிக் கொண்டும் இருப்பதால்தான்., நாம் பல வெற்றி வாய்ப்புக்களைக் கெடுத்துக் கொண்டி ருக்கிறோம்...

மருத்துவப் பயன்கள்: சுக்கு


1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
7. சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.
9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.
10. சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.
11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.
13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.
14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.
15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.
16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.
17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.
18. சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்..!எவ்வளவு சாப்பிடணும்னு தெரியுமா?

எள்ளுமிட்டாய், எள்ளுருண்ட, எள்ளு பொடி இப்படி பலவிதத்துல சின்ன வயசுலயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம். பொதுவாகவே இந்த இனிப்பு வகைகள் நமக்கு ரொம்ப பரிட்சையமான உணவுகளாக அப்போதெல்லாம் இருந்தது. 1 ரூபாய்க்கு 4 எள்ளுருண்ட சாப்பிட்ட காலம் எத்தன பேருக்கு ஞாபகம் இருக்குதுனு தெரியல. ஆனா, இத சாப்பிட்டதுனால வகை வகையான நோய்களில் இருந்து தப்பிச்சிகிட்டோம்னு சொல்லலாம்.

ஆமாங்க, இந்த எள்ளுக்குள்ள எவ்வளவு அற்புதங்கள் இருக்குனு தெரிஞ்சால் நீங்க இனி இத விட்டு வைக்க மாட்டீங்க..! முக்கியமாக, எள்ளு சாப்பிடறதலா புற்றநோய் வராமல்இருக்குமாம். அது மட்டுமில்லாம, புற்றுநோய் வந்தவருக்கும் இது அருமருந்தாக இருக்கும்னு இப்போதைய ஆராய்ச்சியில் கண்டு பிடிச்சிருக்காங்க..!

*முன்னோர்களின் பாதை..!*
எள்ளு சாப்பிடுவதால் பலவித பயன்கள் நமக்கு கிடைக்கும் என்பதாலே எந்த ஒரு பலகாரம் என்றாலும், அதில் கொஞ்சம் எள்ளை நம் முன்னோர்கள் சேர்த்து சமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். உதாரணத்துக்கு முறுக்கு, சீடை, ஓட்டவடை, எள்ளுருண்டை... இப்படி வித விதமான பண்டங்களில் எள்ளை சேர்க்கும் பழக்கம் அன்று முதல் இன்று வரை கடைபிடித்து வருகின்றோம்.

*எள்ளு- உயிர் காக்கும் நண்பன்..!*
இப்படி பலவித உணவு பொருட்களில் எள்ளின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகின்றது. எள்ளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதில் மிக முக்கியமானது புற்றுநோயை எதிர்த்து நிற்பதே. நோய்கள் இல்லாமல் நம்மை வாழ வைக்க ஒரு பிடி எள்ளே போதுமாம்.

*எதிர்ப்பு சக்தி கொண்ட எள்..!*
எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. இந்த சிறிய விதைக்குள் இவ்வளவு மகிமைகள் இருக்குமா..? என்று மிகைத்து பார்க்கும் அளவிற்கு இதன் தன்மை உள்ளது. அத்துடன் புற்றுநோயிற்கும் வழி செய்யுமாம். இதற்கு காரணம் என்னனு உங்களுக்கு தெரியுமா..?

*காரணம் என்ன..?*
இதில் உள்ள எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் எ போன்றவை தான் எள்ளின் அத்தனை மகத்துவத்திற்கும் காரணம். அத்துடன் இதை சரியான அளவில் எடுத்து கொண்டால் பலன் முழுமையாக கிடைக்குமாம்.

*தாய்லாந்தின் ஆராய்ச்சி..!*
தாய்லாந்தின் Chiang Mai University, புற்றுநோய் மற்றும் எள் பற்றிய ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியிட்டது. அதில் கருப்பு எள் புற்றநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும் எனவும், மூளை செல்களை மறு உற்பத்தி செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புற்றநோய் வரவிடாமல் நம்மை காப்பதற்கு மிக முக்கிய காரணம் 'Sesamin' தான்.

*Sesamin அப்படினா என்ன..?*
Sesamin என்பது எள்ளில் உள்ள முக்கிய மூல பொருள். மற்ற தாதுக்களை காட்டிலும் இந்த Sesamin வேதி மூல பொருள் எதிர்ப்பு சக்தியை தூண்டி நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்கிறது. இவை ஆண்கள் பெண்கள் என இரு விதமாக அதன் பயனை பிரித்து தருகின்றது.

*பெண்களுக்கு எப்படி..?*
பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால் அவர்களுக்கு பெரிதாக வருகின்ற மார்பக புற்றுநோய் தடுக்கப்படுகிறது. அத்துடன் ரத்த நாளங்களில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் பார்த்து கொள்கிறது என தாய்லாந்து ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

பெருங்குடல் புற்றுநோயிற்கும்..!
மார்பக புற்றுநோயிற்கு மட்டுமின்றி பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றையும் இது தடுக்கிறது. குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி சுத்தமாக வைக்கிறது. எனவே, புற்றுநோய் அபாயம் உங்களுக்கு கிடையாது.

*கருப்பா..?வெள்ளையா..?*
எந்த எள்ளு அதிக ஆற்றல்களை கொண்டது என்கிற கேள்விக்கு பதில், கருப்பு எள் தான். எள்ளை பற்றிய பல ஆய்வுகளில் கருப்பு எள் தான் மகத்துவம் பெற்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை எள்ளை விட கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் அதிகம் இருக்கிறதாம்.

அட, இதுக்கூடவா..?
நீங்கள் எள் சாப்பிடுவதால் இந்த பயனும் உங்களுக்கு கூடுதலாக கிடைக்கிறது. இதில் இருப்பு சத்து, வைட்டமின் பி, எ, ஆகியவை நிறைந்துள்ளதால் இளம் நரையை தடுக்கும். மேலும் முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும்.

*அழுக்குகளை வெளியேற்ற*
எள் சாப்பிடுவதால் உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடுமாம். குறிப்பாக கல்லீரலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்து ஆரோக்கியமாக இருக்க வைக்கும். முக்கியமாக செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு இதை நன்கு உதவும். எவ்வளவு சாப்பிடலாம்..? தினமும் அரை ஸ்பூன் எள்ளு சாப்பிடுவது சிறந்தது. இதை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லது. குறிப்பாக அரிசி அல்லது ஓட்ஸ்சுடன் சேர்த்து சாப்பிட்டால் பலன் முழுமையாக கிடைக்கும். உடலில் ஏதேனும் நோய்கள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிட்டால் நல்லது.

பழங்களை எப்போது எப்படி சாப்பிடணும்?

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும். சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.

உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.

அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.

பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளம் பழம்...!

மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை  சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிக துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத்  தருகிறது.

இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது, இருமலை  நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்கு சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. குடற்புண்களை குணமாக்குகிறது.

மாதுளையை ஆண்கள் உட்கொண்டு வந்தால், அவர்களின் விந்தணுவை உற்பத்தி செய்யும் புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் தினமும் சிறிது மாதுளையை உட்கொண்டு வருவதன் மூலம், மூட்டுகளில் ஏற்படும் பல பிரச்சனைகள் தடுக்கப்படுவதால் பல  ஆய்வுகள் கூறுகின்றன.

சீதபேதிக்கு மாதுளை சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடைகூடும்.

மாதுளம்பழச் சாறு ஒருடம்ளர் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். நெஞ்செரிச்சல், மந்தம், அடிக்கடி மயக்கம்  போன்றவை நீங்கும்.

மாதுளையை தினமும் ஆண்கள் சிறிது உட்கொண்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தையும், கொலஸ்ட்ராலையும் கட்டுப்பாட்டுடன் வைக்கும். மேலும் ஆய்வுகளிலும் மாதுளை உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, தமனிகளில் கொழுப்புக்கள் படிவதைத் தடுப்பதும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எப்படித் தருகிறோம் என்பதே முக்கியம்:

குருவாயூரில் ஒரு கிராமம்! அங்கு ஒரு கணவனும் மனைவியும் வசித்து வந்தனர். இருவரும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள்.

எப்பொழுதும் வேலை முடித்ததும் கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருவது வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

கிருஷ்ணர் மீது பக்திப் பாடல்கள் பாடி அவனை பூஜிப்பார்கள். ஒருநாள் இரவு கணவன் வெளியே சென்றிருந்த சமயம் அது.

கிருஷ்ணர் குழந்தை வடிவில் அந்த வீட்டிற்குள் நுழைந்தார். மனைவிக்கு அதிர்ச்சி கலந்து ஆச்சரியம்! கண்களில் ஆனந்தக் கண்ணீர்!

உடனே பால கிருஷ்ணனுக்கு ஒரு ஆசனமளித்து அமர வைத்தாள் அவள்! தட்டில் சில பழங்களைக் கொண்டு வந்தாள்! பக்தி மிகுதியால் வாழைப்பழத்தை

உரித்து, பழத்தைத் தட்டில் வைத்து விட்டு பழத்தின் தோலைக் கண்ணனுக்கு அளித்தாள்! கண்ணன் அவளது பக்தியில் மனம் கரைந்து இருந்தான். அவனும் தோலை வாங்கி வாய்க்குள் போட்டுச் சுவைத்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் சென்றதும் கணவன் வீட்டிற்குள் நுழைந்தான். இந்தக் காட்சியைக் கண்டதும் அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது!

மனைவியைக் கடிந்து கொண்டான். அவளும் சுய நினைவுக்கு வந்தாள்! இருவரும் குழந்தை கண்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்.

தங்கள் வீட்டில் சாப்பிட்டுச் செல்ல வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர். உணவு தயாரானது. கண்ணனுக்குப் பரிமாறினார்கள்.

கண்ணனும் சாப்பிட்டான்! கணவன் கண்ணனிடம், "கண்ணா சாப்பாடு சுவையாக இருக்கிறதா?'' என்று கேட்டான்.

அதற்குக் கண்ணன், "உன் மனைவி நான் வந்தவுடன் தந்தாளே வாழைப்பழத்தோல்!....அதைவிட இந்த விருந்தில் சுவை குறைவாகத்தான் இருந்தது!'

இறைவனுக்கு என்ன தருகிறோம் என்பதை விட எப்படித் தருகிறோம் என்பதே முக்கியம்!

#முக்கியம் #கிருஷ்ணன் #குருவாயூர

நெய், வெண்ணெய் எதுல கொழுப்பு அதிகம்? எது உடம்புக்கு நல்லது?

ஆரோக்கியத்திற்குச் சிறந்தது நெய்யா, வெண்ணெயா என்ற விவாதம் பட்டிமண்டபம் போன்று தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. 'பால்' என்ற ஒரே மூலப்பொருளிலிருந்தே நெய், வெண்ணெய் இரண்டும் பெறப்படுகின்றன. இரண்டுக்கும் பல விஷயங்கள் பொதுவாய் உள்ளன.

பாலில் இருந்து நெய், வெண்ணெய் இரண்டும் பெறப்படுகின்றன. வெண்ணெயில் அதிக அளவு கொழுப்பு இருப்பதால், கொலஸ்ட்ரால் அளவுகள் கூடுவதற்குக் காரணமாகிறது. ஏற்கனவே இதய நோய் இருப்பவர்களுக்கு மாரடைப்பு, ஸ்ட்ரோக் என்னும் மூளையில் இரத்தக்குழாய் அடைப்பு, இதய இரத்தநாளம் சம்மந்தப்பட்ட நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவை ஏற்பட வாய்ப்பு அதிகம்.

வெண்ணெய்

'வெண்ணெய் வெட்டி சிப்பாய்' 'கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடித்தல்' போன்ற பல சொற்றொடர்கள் தமிழில் புழக்கத்தில் இருந்து வருகின்றன. இதைக் கொண்டு தமிழ்ச்சமுதாய வாழ்வில் வெண்ணெய் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

பாலிலிருந்து கிடைக்கும் தயிரை கடைந்து கொழுப்பை பிரித்தெடுத்து வெண்ணெய் பெறப்படுகிறது. பட்டர்ஃபேட் என்னும் இயற்கையான கொழுப்பு வெண்ணெயில் அதிகம் காணப்படுகிறது.

அதாவது வெண்ணெயில் ஏறத்தாழ 80 விழுக்காடு பட்டர்ஃபேட் என்ற இயற்கை கொழுப்பு உள்ளது. எஞ்சிய விழுக்காடு நீர், பால் புரதம், சில சமயத்தில் சோடியம் ஆகியவற்றால் நிரப்பப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 10 கிராம் வெண்ணெயில் 5 கிராம் பூரிதகொழுப்பு, 2 கிராம் மோனோ பூரிதமில்லா கொழுப்பு ஆகியவையும் சிறிதளவு பலபடித்தான பூரிதமில்லா கொழுப்பும் காணப்படுகிறது. வைட்டமின்கள் ஏ, டி மற்றும் ஈ ஆகியவையும் ஓரளவுக்குக் காணப்படுகின்றன.

வெண்ணெயின் பயன்கள்

பிரெட் என்னும் ரொட்டி மற்றும் அதன் டோஸ்ட் மீது பூசுவதற்கு, மசித்த உருளைக்கிழங்கு மற்றும் சமைத்த காய்கறிகளுடன் மற்றும் பல சமையல், பேக்கரி பண்டங்கள், பல்வேறு உணவுகள் தயாரிக்க வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

வெண்ணெய் நண்பனா? பகைவனா?

வெண்ணெயில் அதிக அளவு பூரித கொழுப்பு இருப்பதால், செரம் லிப்பிடு என்ற கொழுப்பு மற்றும் முழு கொலஸ்ட்ரால் அளவுகள் கூடுவதற்குக் காரணமாகிறது. ஏற்கனவே இதய நோய் இருப்பவர்களுக்கு மாரடைப்பு, ஸ்ட்ரோக் என்னும் மூளையில் இரத்தக்குழாய் அடைப்பு, இதய இரத்தநாளம் சம்மந்தப்பட்ட நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவை ஏற்படுவதற்கு வெண்ணெய் வழிவகுத்து விடும்.

தினசரி எடுத்துக்கொள்ளும் கலோரியில் 7 விழுக்காட்டுக்கும் அதிகமாக பூரித கொழுப்பின் அளவு இருக்கலாகாது என்று உடல் நலம் மற்றும் உணவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆகவே, கூடுமானவரைக்கும் குறைந்த அளவே வெண்ணெய் சாப்பிடுவது நல்லது.

நெய்

வெண்ணெயை உருக்கி, அதிலுள்ள நீரை முற்றிலுமாக நீக்கி, காய்ச்சுவதன் மூலம் அசுத்தங்கள், மாசு ஆகியவற்றையும் வெளியேற்றிய பின்னர் கிடைப்பதே நெய். லாக்டோஸ் உள்ளிட்ட பால் சார்ந்த புரதங்கள் வெண்ணெயிலிருந்து நீக்கப்படுகின்றன. இந்தியாவில் நெய் மிகவும் முக்கியமானது. பல்வேறு சமையல்களில் இது பயன்படுத்தப்படுகிறது.

வெண்ணெயில் 80 விழுக்காடு கொழுப்பு காணப்படுகிறது;நெய்யிலோ 99.5 விழுக்காடு கொழுப்பு உள்ளது. ஆனால், வெண்ணெயைக் காட்டிலும் நெய்யின் புகைநிலை அதிகமாகும். 500 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில்தான் நெய் சூடாகி, புகை வெளிவர ஆரம்பிக்கும். உணவுக்கு வெண்ணெயை காட்டிலும் அதிக சுவை கொடுக்கும் ஆற்றல் நெய்க்கு உண்டு.

நெய்யின் பயன்கள்

சமையலுக்கு பயன்படுகிறது. வதக்குவதற்கு, கிளறி பொரிப்பதற்கு மற்றும் முற்றிலும் பொரிப்பதற்கு என்று பல வகைகளில் நெய் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருந்துகளிலும் நெய் இடம்பெறுகிறது.

சில ஆய்வுகள், நெய் கொலஸ்ட்ரால் அளவை மட்டுப்படுத்தி, இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருவதாக கூறுவதாக கருதப்படுகிறது. நெய்யில் பூரித கொழுப்பு அதிக அளவில் இருப்பதால் இதய ஆரோக்கியம் குறித்த இந்தக் கருத்தை உறுதி செய்வதற்கு மேற்கொண்டு ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

எது உடலுக்கு நல்லது?

பூரிதம் மற்றும் மோனோபூரிதமற்ற கொழுப்புகள் வெண்ணெய், நெய் இரண்டிலுமே அதிக அளவு உள்ளன. இரண்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஆகவே, இரண்டையும் அளவாக சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்லது.

லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாதவர்கள் வெண்ணெயை சேர்த்துக்கொண்டால் அஜீரணம் ஏற்படலாம். ஆனால், நெய் சாப்பிட்டால் இதுபோன்ற விளைவுகள் ஏற்படாது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். என்னதான் சுவை மிகுந்ததாக இருந்தாலும் நெய்யை மட்டுமல்ல, வெண்ணெயையும் மட்டாய் சாப்பிடுவதே நல்லது.

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...